Tuesday, February 15, 2011

madhuramana mahaneeyar SEP 2010 - 175- Dr.A.Bhakyanathan

மனித பிறவி எடுத்தலும், உத்தமமான ஸத்குருநாதரின் சங்கம் கிட்டுவதும் மிக அரிது. அப்பேர்ப்பட்ட குருநாதரின் அருளினால் முக்தி கிடைக்க பெறுவதே மனிதபிறவியின் இலட்சியம்.  முக்தி அடைவதே மனித பிறவியின் இலட்சியம் என  ஸ்ரீமத்பாகவதமும்,  ஸகல ஸாதிரங்களும் போதிக்கின்றன என ஸ்ரீஸ்வாமிஜி பன்முறை கூறி உள்ளார் அல்லவா? இருப்பினும், ஒரு குருவானவர், தமது சீடனின் உலக வாழ்விற்கு தேவையானவற்றை, பூரணமாக தந்து அருளுவார்.
       ஸ்ரீஸ்வாமிஜி, தம்மை அண்டியோரின் மிக சிறிய தேவைகளை கூட, எப்படி பூர்த்தி செய்கிறார் என்பதை சத்சங்கத்தினர் அறிவர். அப்படி ஒரு நிகழ்ச்சியை, இங்கு பகிர்ந்து கொள்ள நான் பிரியப்படுகிறேன். நமது சத்சங்கத்தை சேர்ந்த  திரு.வெங்கடேசன் குடும்பம், ஸ்ரீஸ்வாமிஜியிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டது.
         நங்கநல்லூரிலிருந்து வரும் இவரின் தந்தை, திரு.குருமூர்த்தி  பிரதிவருடம் ஹரித்வார் மற்றும் ரிஷிகேசம் யாத்திரை சென்று வருவார். இவ்வருடமும் அவருக்கு, அங்கு செல்ல, ஆசை இருந்து வந்தது. திரு.வெங்கடேசனின் தாய் திருமதி.நீலாயதாஷிக்கு காலில் வலி இருந்ததால், இதை தள்ளி போட்டு வந்தனர். இருப்பினும், குருமூர்த்தி அவர்கள்  எப்படியேனும் யாத்திரை செல்ல முடிவு செய்தார். செல்லும் முன், வந்து,  ஸ்ரீஸ்வாமிஜியின் ஆசிகளை பெற்று சென்றார்.
        அவரது துணைவியாருக்கு காலில் வலி இருந்ததால், பிரத்யேகமாக இதற்கென ஒரு ஸ்பெஷல் காலணியை புதிதாக  வாங்கி அணிந்து சென்றார். 76வயதானாலும் குருமூர்த்தி தன் துணைவியாருடன் தனித்தே சென்றார். ஹரித்வாரில் முதல் நாள் தரிசனம் முடிந்தது. அங்கு தங்கி விட்டு, அடுத்த நாள் ரிஷிகேசம் செல்வதாக ஏற்பாடு. புது காலணி வெங்கடேசனின் தாயின் காலை நன்கு கடித்து விட்டது. நல்ல வீக்கம் வந்து விட்டது. இருப்பினும், தம்பதிகளிருவரும் மறுநாள் ஒரு காரில் ரிஷிகேசம் புறப்பட்டு சென்றனர்.
         அங்கு இறங்கி நடக்கையில், வெங்கடேசனின் தாய்க்கு,  காலில் செருப்பு கடித்த இடத்தில், தோல் கிழிந்து ரத்தம் வர ஆரம்பித்து விட்டது.  துணியினால் அடைத்து பார்த்தும் அது நிற்கவில்லை. சர்க்கரை உபாதை வேறு இருந்ததால், ரத்தம் நிற்காததினால், அவருக்கு கடும் அசதியாகி விட்டது. ஒரு சமயத்தில் தன் கணவரிடம் "எங்கிருந்தாவது பிளாஸ்திரி வாங்கி வாருங்கள்.  மேற்கொண்டு நடக்க இயலாது" என்றபடி அப்படியே அமர்ந்து விட்டார். மேலும் நம் ஸ்ரீஸ்வாமிஜியை பன்முறை "குருஜி! என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள். நீங்களே துணை" என மனதாலும் வாய்விட்டும் பிரார்த்தித்தவாறு இருந்தார்.  
                 வெங்கடேசனின் தந்தை குருமூர்த்தியும் பல இடங்களில் விசாரித்தும், யாதொரு  மருந்து கடையும் கண்ணில் படவில்லை. அன்று ஏதொவொரு "பந்த்"தாம்; ஒரு கடையும் திறந்து இருக்கவில்லை. தட்டு தடுமாறி வேறு வழி இல்லாததால், இருவரும்,  உதவி தேடி நடந்து சென்றனர்.
                   சிறிது தூரம் சென்ற பின், ஒரு கடை தென்பட்டது. சிறு டப்பாக்கள் கொண்ட ஓமியோபதி கடை போல் தென்பட்டது அது. குருமூர்த்தி அக்கடையில் விசாரித்தார். கடைக்காரருக்கு இந்தி மட்டும்தான் தெரிந்து இருக்கிறது. குருமூர்த்தி அவர்களுக்கோ, இந்தி சுத்தமாக தெரியாது. வெங்கடேசனின் தாய், தனது காலை காண்பித்து, சைகையின் மூலம் "பிளாஸ்திரி" வேண்டும் என கடைக்காரருக்கு புரிய வைத்தார்.  காலில் ரத்தம் வடிவத்தை பார்த்தவுடன், என்ன கேட்கிறார்கள் என புரிந்து கொண்டார் கடைக்காரர். ஆனால் என்ன செய்வது! அது ஒரு ஊறுகாய் கடையாம்! அங்கு எப்படி பிளாஸ்திரி இருக்கும்! கடைக்காரர் கையை விரித்தார்.
                   வருத்தமுடன் அவர்கள் மேற்கொண்டு செல்ல எத்தனிக்க, கடைக்காரர் மறுபடி அழைத்தார். தனது கடை மேஜை டிராயர்களில் மூன்றை மாறி மாறி திறந்தவர் சற்று சந்தோஷத்துடன் ஒரே ஒரு பிளாஸ்திரியை எடுத்தார். என்றோ அவர் வைத்ததாம். அந்த பிளாஸ்திரியை  திரு.வெங்கடேசனின் தாயால் சுயமாக குனிந்து ஒட்டி கொள்ளக்கூட முடியவில்லை. கடைப்பையனே வந்து சரியாக ஒட்டி விட்டான். உதவிக்கு பணம் எதுவும்  கடைக்காரர்  வாங்க மறுத்துவிட்டார். (கஷ்டம் தீர்ந்தது மட்டுமல்ல. சென்னை வரும் வரையில் அதே பிளாஸ்திரியோடுதான் அவர் வந்தார்! )
           அப்பொழுதுதான் வெங்கடெசனின் பெற்றோர், கடையின் போர்டை பார்த்தனர். "முரளி ஸ்டோர்ஸ்" என்று அது தெளிவாக எழுதப்பட்டு இருந்தது. நம் ஸ்ரீஸ்வாமிஜியின் நாமம் அதுதானே! புல்லரித்தது தம்பதிகளிருவருக்கும். உடன் மானசீகமாய் ஸ்ரீஸ்வாமிஜியை வணங்கினர். ஸ்ரீமந்நாராயணனுக்கு ஆயிரக்கணக்கில் கைகள் என்று புருஷ சூக்தம் கூறுகிறது. அஃதாவது எல்லா கைகளும் அவனுடையதே. எப்படி வேண்டுமானாலும் அவன் உபயோகப்படுத்துவான். குருநாதருக்கும் இது சால பொருந்தும் அல்லவா? குரு என்பவர், ஆறடி சரீரம் கொண்டு இலகுபவர் மட்டுமல்லவே? அவர் சர்வ வியாபி அல்லவா? அதனால் நாமம் கொண்டு அழைத்தவுடன், உதவிக்கு வந்து விட்டார்.

Wednesday, February 9, 2011

madhuramana mahaneeyar nov 2010 - 176- Dr.A.Bhakyanathan

நான்கு வருடங்களுக்கு முன்பாக ஸ்ரீஸ்வாமிஜி தூத்துக்குடியில் பக்தர் கதிரேசன் இல்லத்தில் ஓர்நாள் பல விஷயங்களை பேசினார். அப்பொழுது, "எவ்வளவோ ஊரில், பலநாட்கள் தங்கி, பிரவசனம் எல்லாம் செய்கின்றோம். புரியாத மொழியில் அஷ்டபதி, அபங்கம் என்று பாடுகின்றோம். அதன் ராக இனிமையும் தாளகட்டும், எல்லோருக்கும் ஒரு ஈர்ப்பை தருகின்றதே தவிர அதன் அர்த்தம் அவர்களுக்கு புரியாது. சுலபமாக எல்லோருடைய கஷ்டங்களுக்கும் விமோசனம் ஏற்படும்படியாக கூட்டு பிரார்த்தனை செய்யவேண்டும் என்று எனக்குள்ளே தோன்றிக்கொண்டே இருக்கின்றது.
          மஹாத்மா காந்தி கூட பிரார்த்தனை கூட்டங்களை நடத்தி உள்ளார். கதை கேட்டோம், பஜனை கேட்டோம், அர்ச்சனை செய்தோம், ஹோமத்திற்கு பணம் கொடுத்தோம், பரிகாரங்கள் செய்தோம் என்று எல்லோரும் சொல்வதை கேட்கின்றோம். ஆனால், கருணையே உருவான பகவானிடம் பிரார்த்தனை செய்தோம் என்று ஏன் சொல்வதில்லை. பிரார்த்தனை சுலபமாக இருக்கவேண்டும். அதுவும் வியாபாரமாகி விடக்கூடாது. பிரார்த்தனை வலிமை மிக்கது. சுலபத்தில் பலன் தரக்கூடியது. கலியினால்தான் மக்கள் இவ்வளவு துன்பத்தை அனுபவிக்கின்றார்கள். அந்த கலி உபாதையை மஹாமந்திரத்தால்தான் மட்டும் சுலபத்தில் போக்க முடியும் என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும்" என்று ஸ்ரீஸ்வாமிஜி ஒரு உத்வேகத்துடன் சொல்லி வந்தார்கள்.
             மேலும் ஸ்ரீஸ்வாமிஜி அவர்கள், "இதைத்தான் காஞ்சி மஹாஸ்வாமிகளும் ஆசைப்பட்டார். அந்தக்காலத்தில் சினிமாவில் நடித்து வந்தவரும் ஆன்மீகத்தில் விருப்பமுள்ளவருமான S.V.சுப்பையா மற்றும் பலரை கிராமங்களில் பாமர மக்களிடம் சென்று ராம நாமத்தை சொல்லி வர பணித்தார். மடத்தில் ராம நாமம் எழுதி கொடுத்தால், வெள்ளி காசு கொடுத்தார். திருப்பாவை, திருவெம்பாவையை வெளியில் கொண்டுவந்து ஒவ்வொரு கோவிலிலும் மார்கழி மாதத்தில் இசைக்க செய்தார். இவையெல்லாம் பெரிதாக பிரச்சாரத்திற்கு  பின்னாளில் வரவில்லை. பகவன்நாம போதேந்திராள், மஹாஸ்வாமிகள், ஸ்ரீஸ்ரீஅண்ணா எல்லோரும் இதற்காகத்தான் கவலைப்பட்டார்கள்.
           ராமகிருஷ்ணர், "பலர் கூடி ஒரு இடத்தில் பிரார்த்தனை செய்தால் அதற்கு விசேஷ சக்தி உண்டு" என்று அடிக்கடி சொல்வார்". மேற்கண்டவாறெல்லாம், தமது உள்ளக்கிடக்கையை ஸ்ரீஸ்வாமிஜி பகிர்ந்து கொண்டார்கள்.
          இப்படி அவர் பேசுவது பலிதமாவதை நாம்தான் பார்த்து வருகிறோமே? அப்படியே, மறுநாளே, முதல் MASSPRAYER தூத்துக்குடியில் நடந்தது. பின்னர், சென்னை காமராஜர் அரங்கத்தில் ஜனவரி1, 2007 அன்று, மஹாமந்திர கூட்டு பிரார்த்தனை பல ஆயிரக்கணக்கான அன்பர்கள் கலந்து கொள்ள நடைபெற்றது. இப்படி துவங்கிய இந்த மஹாமந்திர கூட்டு பிரார்த்தனை, தமிழ்நாட்டில் கிராமங்களிலும், நகரங்களிலும், இதர மாநிலங்களிலும், ஏன் இந்தியாவையும் தாண்டி பிற நாடுகளிலும் ஒரு கம்பீரமான அலை போன்று கிளம்பி  செல்வதை  பார்த்து  வருகிறோம்.
    சென்ற மாதம் அம்பாசமுத்திரம், தூத்துக்குடி, சிவகாசி, கோவில்பட்டி, விருதுநகர், கல்லிடைக்குறிச்சி, பெரியகுளம், மதுரை, திருச்சி, திருப்பூர், உடுமலைப்பேட்டை ஆகிய இடங்களில் நடந்தது. எல்லா ஊர்களிலும் 2500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டார்கள். ஸ்ரீவாரி டிரஸ்ட் என்ற டிரஸ்டின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருப்பூர் MASSPRAYER அன்று சற்றேறக்குறைய 10000பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை 4.30க்கு ஆரம்பித்த MASSPRAYER இரவு 8.30க்கு முடிந்தது. ஸ்ரீஸ்வாமிஜியும் நான்கு மணிநேரம் Non-Stop ஆக நாமத்தின் பெருமையை பல அற்புதங்களுடன் எடுத்து எடுத்து பேசினார். ஸ்ரீஸ்வாமிஜி நான்கு மணிநேரம் தொடர்ந்து பேசியது பெரிய விஷயமல்ல. கூடியிருந்த பக்தர்கள் நான்கு மணிநேரமும் கலையாமல் மெய்மறந்து கேட்டுக்கொண்டிருந்தார்கள். எல்லோருக்கும் பிரசாதமும் (உணவும்) அளிக்கப்பட்டது.

Wednesday, February 2, 2011

Wrapper Madhuramurali FEB 2011

Inner of Wrapper Madhuramurali Feb 2011

Back of Centre Page madhuramurali Feb2011

Centre Page of Magazine Feb2011 Madhuramurali

Advertisements in Print issue of Feb 2011 Madhuramurali

New Namadwaar in Tutukudi Invitation

Upcoming events of Sri Swamiji

ஹே கிருஷ்ணா! உன்னை ஊனக்கண்ணால் அறிய இயலாது

உத்க்ஷேபணம் கர்பகதய பாதயோ: கிம் கல்பதே மாதுரதோக்ஷஜாகஸே
கிமதி நாதி வ்யபதேஸபூஷிதம் தவாதி குக்ஷே: கியதப்யநந்த:

"ஹே கிருஷ்ணா! உன்னை ஊனக்கண்ணால் அறிய இயலாது. ஞானக்கண் கொண்டல்லவா உன்னை அறிய முடியும்? தூலம், சூக்குமம், காரியம், காரணம் என்றும், இல்லை என்றும், இருக்கிறது என்றும் சொல்லப்படுகிற எந்த வஸ்துதான் உனக்குள் இல்லை? (எல்லாம் உனது வயிற்றினுள் அல்லவா இருக்கிறது. எதுவும் உனக்கு வெளியில் இல்லை). நானும் உனது வயிற்றிலேயே இருக்கிறேன். கர்ப்பத்திலிருக்கும் குழந்தை உதைப்பதை தாய் குற்றமாக கருதமாட்டாள் அல்லவா? (அதுபோல், ஸர்வேவரனான நீயும் ப்ரும்மதேவனான நான் செய்த குற்றத்தை சிசு செய்ததாக எடுத்துக்கொளல் வேண்டும்) உனது மஹிமையை அறிய சக்தியற்றவன் நான்" என்று ப்ரும்மா நெடுஞ்சாணாக கிருஷ்ணனின் கால்களில் நமகாரஞ்செய்து விண்ணப்பித்தார்.
-பாகவதம்-கந்தம் 10, அத் 14

ஸ்லோகம் - "வேதபாஷ்யரத்னம்", "மகாமகோபாத்யாய" "தர்சன கலாநிதி" ப்ரும்மஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள்

1. போதனம் யஸ்ய ஸததம் முரளீரவ ஸம்மிதம்
ஜனானாம் ஹ்ருதயம் ஸ்ப்ருஷ்ட்வா நந்தயத்யனிஸம் கலு
எவருடைய போதனாசக்தி, பேசும் குரல் புல்லாங்குழல் போல் (முரளி போல்) இனியனதாக இருந்துகொண்டு, கேட்போரின் ஹ்ருதயத்தை தொட்டு, உடனே ஆனந்தத்தை அளிப்பது கண்கூடாக உள்ளதோ, அவரே ஸ்ரீமுரளீதர வாமிஜி ஆவார்.

2. அஸ்ய க்ருஷ்ணே பராபக்தி: குரௌ பரதராபி ச
நாமஸங்கீர்த்தனே நிஷ்டா ஜன்மஜாதேவ ராஜதே
இவருக்கு ஸ்ரீக்ருஷ்ணனிடம் நிகரற்ற பராபக்தி அன்பும், ஸ்ரீகுருவினிடத்தில் மிக உயர்ந்த பக்தியும், நாமசங்கீர்த்தனத்தில் நிஷ்டையும் (ஸதா உள்ளுணர்வும், இம்மூன்றும்) பிறவியிலேயே தோன்றியதாக விளங்குகிறது!

3. தினே தினே ஸுப்ரபாதே "விஜயே" தூரதர்ஸனே
அஸய வாணீ ஸுமதுரா குஷ்யதே ஜனதாப்ரியா
பிரதிதினம் காலை வேளையில் "விஜய்" தொலைக்காட்சியில் இவரது மிகவும் இனிமையான வாணீயானது ஸர்வஜனங்களுக்கும் ப்ரியமாக கோஷிக்கப்படுகிறதன்றோ!

4. தசமகந்தஸாரோயம் பக்தஸுக்தி ஸமன்வித:
ஸஹரஸோ ஜனான் ஸர்வான் ப்லாவயன் நந்தஸாகரே
(ஸ்ரீமுரளீதரவாமிஜி அவர்களின்) இந்த தசமகந்த ஸாரம் (ப்ருந்தாவனமும் நந்தகுமாரனும்) என்ற ஒரு வாரத்தின் பிரவசனம் திருஆழ்வார்களின் ஸூக்திகளுடன் ஒப்பிடப்பட்டு ஆயிரக்கணக்கான மக்களை ஆனந்தஸாகரத்தில் மூழ்கச் செய்தது (என்பதில் ஐயமில்லை)!

5. "மத்பக்த ஏதத்விக்ஞாய மத்பாவாயோபபத்யதே"
ஸத்யாபிதேயம் உக்திர்ஹி முரளீதரஸூரிணா
"எனது பக்தன் என் தன்மையையே அடைகிறான்" என்ற கண்ணனின் கீதாவாக்கியம் ஸ்ரீமுரளீதர வாமிஜி அவர்களால் உண்மையாக்கப்பட்டு நிரூபிக்கப்பட்டதன்றோ! (தன்மயம் - தான் உபாஸிக்கும் தெய்வம் உபாஸகருக்கு முழுமையான தனது தெய்வத்தன்மையை தந்து விடுகின்றது என்பது உபநிஷத்தின் ஸாரம்" -" யதா யதா உபாஸதே ததேவ பவதி")

6. பக்திர்ந்ருத்யதி ஹ்ருத்பத்மே யஸ்ய யேன ஸுரக்ஷ்யதே
தர்மோ விவமுகோ லோகே ஸோயம் ஜீயாத் ஸமார்புதம்
எவருடைய "ஹ்ருத்"பத்மத்தில் பக்தி நடனம் புரிகிறதோ, எவரால் பல பல தர்மங்கள் உலகம் முழுவதிலும் பரப்புவதன் மூலம் ஸம்ரக்ஷிக்கப்படுகின்றதோ, அத்தகைய ஸ்ரீமுரளீதர வாமிஜி அவர்கள் பல்லாண்டுகள் ஆரோக்கியத்துடன் வாழ ஸ்ரீக்ருஷ்ண க்ருபையை வேண்டுகிறோம்.

சனாதனப் புதிர் - பகுதி - 23 -ஆத்ரேயன் - (விடைகள் )

1. நிசக்னு - பாண்டவர் வம்சாவழியில் வந்தவர். கௌஸம்பி என்ற நகரம் (விஷ்ணு புராணம் 4.21)
2. மரம், செடி தாவரங்களில் இருந்து கிடைக்கும் ஔஷதம், பால், மிருகங்கள், சோமரஸம், நெய்
3. அதர்வ வேதம் - 15.6.4; சதபத ப்ராஹ்மணம் - 13.4.3.12; பிரஹதாரண்யக உபநிஷத் - 2.4.10
4. முதலாவது செல்வத்தை அடைய; இரண்டாவது கொடிய வியாதிகளிலிருந்து விடுபட.
5. மாகிஷ்மதி - யுத்தம் செய்யும்பொழுது ஆயிரம் கைகளை பெற முடியும் என்ற வரம்; ஜமதக்னி; பரசுராமரால் கொல்லப்பட்டான்.
6. மஹாபாரதம், ஹரிவம்சம், விஷ்ணு புராணம், பாகவதம், ப்ரஹ்மபுராணம், பத்மபுராணம், ப்ரஹ்மவைவர்த்திக புராணம் (கிருஷ்ணஜன்மகாண்டம்)
7. சம்பகா, குமுதவதி
8. பத்மா(கமலா), தரணி, சீதா, ருக்மணி
9. 2694 லோகங்கள்- 12 அத்தியாயங்கள், மேதாதிதி; கோவிந்தராஜர்; குலூகர் - இவர்கள் உரை எழுதி இருக்கிறார்கள்.
10. சதபத ப்ராஹ்மணம் (3.2.1.23; 3.2.1.24) ; கௌதம தர்மஸூத்ரம் (9.17) ; மஹாபாரதத்தில் பல இடங்களில் ; பவிஷ்ய புராணம் ; விஷ்ணு பகவான் கலியில் மிலேச்சர்களை அழிக்க அவதாரம் செய்வார்.

சனாதனப் புதிர் - பகுதி - 24 -ஆத்ரேயன் - (விடைகள் அடுத்த இதழில்)

1. உபநிஷத் அஜாதசத்ரு என்பவரை பற்றி குறிப்பிடுகின்றது? எந்த உபநிஷத்? யார் இவர்?
2. 24 ஏகாதசி மஹாத்மியம் எந்த நூலில் விரிவாகக் காணப்படுகின்றது?
3. அதர்மத்தின் மனைவி, மக்கள் யார்? இதை உருவகப்படுத்தியது எந்த புராணம்?
4. ராதாமஹாத்மியம், அர்ஜூனன், நாரதர் இவர்களுக்கு ராதா லோகத்தை காண்பிப்பது என்ற சரித்திரங்கள் எந்த புராணத்தில் காணப்படுகின்றன?
5. அத்யாத்ம உபநிஷத் எந்த வேதத்தை சார்ந்தது? இதன் மற்ற பெயர்கள் என்ன?
6. பகவத்கீதையின் உயர்வு மற்றும் கீதையின் அத்தியாயம் ஒன்று முதல் பதினெட்டு வரை - இவைகளின் விசேஷங்கள் எந்த நூலில் விரிவாக காணப்படுகிறது?
7. ஆதித்ய தீர்த்தம் எங்கே இருக்கிறது? இதைப்பற்றி எந்த நூலில் குறிப்புகள் உள்ளன?
8. ஐராவதம் என்ற பாம்பு அரசர் யாரை காப்பாற்றினார்?
9. அச்யுத ப்ரேக்ஷா யாருக்கு சன்யாச தீஷை கொடுத்தார்? இவரைப் பற்றிய குறிப்பு எங்கே காணப்படுகிறது?
10. ராதையை பற்றி விரிவாக பல காண்டங்களிலும் அத்தியாயங்களிலும் காணப்படும் நூல் எது?

அப்பாலுக்கு அப்பால் -- நரஹரி சோனார் -1

"அப்பாலும் அடிச்சார்ந்தார் அடியார்க்கும் அடியேன்" என்று சுந்தரமூர்த்திஸ்வாமிகள் திருத்தொண்டத்தொகையில் பாடி உள்ளார். அறுபத்திமூவரான நாயன்மார்களில் பலர் தமிழ்தேசத்தவர். அப்பாலும் அடிச்சார்ந்தார் என்பது வெளிதேசத்தில் சிவபக்தி செய்த பக்தர்களை குறிப்பது. இவர்கள் கணக்கற்றவர். அப்படிப்பட்ட அடியாரில் ஒருவர் நரஹரி சோனார். பிற்காலத்தில் ஞானதேவரின் சீடர்களில் ஒருவராய் இருந்தவராக கூறப்படுகிறது.
பரமசிவன் ஸ்ரீமத்பாகவத மஹாபுராண அம்ருதமதன கட்டத்தில் ஹரியிடம் பிரியமாக இருப்பவர்கள் தனக்கு பிரியமானவர்கள் என்று கூறுகிறார். மேலும் பாகவதமும், "வைஷ்ணவர்களில் சிரேஷ்டமானவர் சம்புவே" என்றும் கூறுகிறது. இந்த பாகவத மஹாபுராணத்தின் ஏகநாயகனான கண்ணபிரான் தானே ஒரு சிவபக்தருக்கு சிவபிரானாக காட்சி தந்து, அவருக்கு தானும் பரமசிவனும் வேறில்லை என்று கூறியதை பார்ப்போம்.
பரதம் என்றால் ஞானியர் வாழும் பூமி என்று பொருள். ராஷ்டிரம் என்றால் தேசம் என்று பொருள்படும். ஞானியர் வாழும் பூமியில் மஹத்தான தேசம் மஹாராஷ்டிரம். இந்த மஹாரஷ்டிரத்தில் கலிக்கு பின் தானே அர்ச்சாவதாரமாக கண்ணன் எழுந்தருளி இருக்கும் ஊர் பண்டரிபுரம். பண்டரிபுரத்தில் பொற்கொல்லர் வம்சத்தில் பிறந்தவர் இவர். பண்டரிபுரத்தில் ஹரியின் பரமபக்தர்களின் கூட்டம் எப்பொழுதும் உண்டு. அப்படிப்பட்ட இடத்தில் பிறந்தார் எனினும் இவருக்கு விட்டலனிடம் ஈடுபாடு வரவில்லை. இவருக்கு பரமசிவனிடம் மட்டுமே பிரியம் இருந்தது. பிற தெய்வங்களை பார்க்க மாட்டார். இவர் வீட்டருகேதான் விட்டல மந்திரும் இருந்தது. ஆனால், ஒருநாளும் அந்த விட்டல மந்திர் கோபுரத்தை கூட இவர் சேவிக்க மாட்டார். கணக்கற்றவர்கள் விட்டலனை பார்க்க சென்றாலும், இவர் அங்கு செல்ல மாட்டார். சேவார்த்திகள் குறைவான, அருகிலுள்ள மல்லிகார்ஜுனரின் கோவிலுக்குத்தான் செல்வார். சிவபக்தருக்கு உரிய சகல லட்சணங்களும் இவருக்கு இருந்தது. விடியற்காலையில் பீமாநதியில் நானம் செய்வார். திருநீறு இட்டு, பஞ்சாக்ஷர ஜபம் செய்வார்; நறுமலர்கள் கொய்து கொண்டு கோவிலில் சமர்ப்பிப்பார், இயன்ற வரை பரோபகாரம் செய்வார். உலக ஆசைகளை ஒதுக்கிய விரக்தராக இருந்தார். இதுவே நரஹரிசோனார். ஆனால், வேலையில் இவர் படு சுட்டி. இவர் செய்த நகைகள் சோடை போனதே இல்லை. அனைத்தும் ஜொலிக்கும். மேலும் நேர்மைக்கு பேர் போனவர். இவருக்கு பொருளில் ஆசையில்லை. சிவனருளுக்கு ஏங்கி இருந்தார்.
பண்டரியில் இருந்தவர்கள் எல்லாம் இவரை வித்தியாசமாக நினைத்தனர். "அட! இது என்ன, முன்னிருக்கும் விட்டலன் எனும் புதையலைக் கண்டும் இவன் காணாதது போல் செல்கிறான்!" என்று பேசிக்கொள்வர். ஆனால் நரஹரி சோனாரோ, எப்படி பல நட்சத்திரங்கள் வந்தாலும், தாமரை மலராமல் சூரியனுக்கு மட்டுமே மலருகிறதோ, அப்படியே தனது இஷ்ட தெய்வமான பரமசிவனிடம் மட்டுமே மனம் வைத்தவாறு இருந்தார். ஒருமுறை எவராவது அவர் காதில் சிவ நாமத்தை சொன்னாலும், பரவசராய் காணப்படுவார். பரமசிவன் கோவில் கண்டாமணி ஒலித்தால், இருந்த இடத்திலிருந்து வணங்குவார்.
துளசிதாசர் ப்ருந்தாவனம் செல்லாவிடில், கண்ணன் அவருடன் விளையாடி இருப்பானா என்று சொல்ல முடியாது அல்லவா? ராமரை மட்டும்தான் அவர் தரிசித்திருப்பார். அதுபோல் நரஹரிசோனார் வேறு எங்காவது இருந்திருந்தால், அவர்பால் கண்ணன் மனம் சென்றிருக்குமா என்று தெரியவில்லை. அவரோ அவன் காலடியில் அல்லவா இருக்கிறார். இருந்தும் பரமசிவனை அல்லவா பஜிக்கிறார். இறைவன் தனக்கு பிரியமானவர்களோடு விளையாடுகிறான். அவன் நரஹரிசோனாருடன் விளையாடியதில் மற்றொருவரும் சம்பந்தப்பட வேண்டி வந்தது.

மாலே மணிவண்ணா - 92 -மகாவித்துவான் மயிலம். வே. சிவசுப்பிரமணியன்

சர்வ ஜகத்காரணனாய் உள்ள எம்பெருமானே எல்லாவற்றுக்கும் மூலகாரணமாக, எல்லாமாக இருப்பவன் என்பதைப் பரிபாடல் இந்தப்பகுதியில் விளக்க வருகிறது.
பொருளின் தோற்றத்திற்கு மூன்று காரணங்கள் வேண்டும். ஒரு காரியம் நிகழுமானால், அதற்கு முதல்-துணை-நிமித்தம் என்ற மூன்று காரணங்கள் வேண்டும்.
குடம் உண்டாக வேண்டும் என்றால் குடத்துக்கு முதற்காரணம் மண், அது குடமாகிய காரியத்தோடு ஒற்றுமை உடையது. அது இல்லாமல் குடம் தோன்ற முடியாது. மண்ணே- குடமாய் விடாது - மண்ணைக் குடமாகக் காரியப்படுத்துவதற்கு துணைக்காரணமாய தடியும் சக்கரமும் வேண்டும். சக்கரத்திடையில், மண்ணைவைத்துத் தடியால் சுழற்றினால் மண்குடமாகிறது. மண்குடமானதும் தடியும் சக்கரமும் நீங்கி விடுகின்றன. எனவே இவற்றை துணைக்காரணம் என்கிறோம். மண், தடி, சக்கரம் இவை எல்லாம் சடப்பொருள்கள் அதாவது அறிவற்றவை; ஆகையால் மண்ணைத்திரட்டவும் சக்கரத்தில் வைக்கவும் தடியால் சுழற்றவும் அறிவுள்ள குயவன் தேவை. அவனே நிமித்த காரணம் ஆகிறான். மண், தடி, சக்கரம் இருந்தாலும் குயவன் இல்லாமல், அவை தாமே குடமாய் விட மாட்டா. எனவே ஒரு முதற்காரணத்திலிருந்து, சில துணைக்காரணங்களைக்கொண்டு ஒரு காரியத்தை நிகழ்த்துகிறவனே நிமித்த காரணமாகிறான். இவ்வாறு முதல் துணை நிமித்த காரணங்களைக்கொண்டு, ஒரு காரியத்தை செய்வதையே "சற்காரிய வாதம்" என்று தத்துவவாதிகள் சொல்லுவர்.
வைணவ சமய தத்துவப்படி, உலகத்தோற்றத்திற்கு அதாவது தனு-கரண-புவன லோகங்களுக்கு அடிப்படையான மூன்று காரணங்களாகவும் இருப்பவன் எம்பெருமானே என்பது அடிப்படைக் கொள்கைகளுள் ஒன்றாகும்.
"நினைந்த எல்லாப்பொருள்களுக்கும் வித்தாய் முதலில் இதையாமே
மனஞ்செய் ஞானத்து உன் பெருமை"
"தான் ஓர் உருவே தனிவித்தாய் தன்னில் மூவர் முதலாய
வானோர் பலரும் முனிவரரும் மற்றும் முற்றுமாய்"
(திருவாய் 1.5.3,4)
தன்னுளே திரைத்தெழும் தரங்கவெண்தடங்கடல்
தன்னுளே திரைத்தெழுந்து அடங்குகின்ற தன்மைபோல்
நின்னுளே பிறந்திறந்து நிற்பவும் திரிபவும்
நின்னுளே அடங்குகின்ற நீர்மை நின்கண் நின்றதே (திருச்சந்த விருத்தம் 10)
என்கின்ற பாசுரங்கள் இக்கருத்தை விளக்கும். கடலிலிருந்து அலைகள் தோன்றி கடலிலேயே அடங்கிவிடுகின்றன.

ப்ருந்தாவனமும் நந்தகுமாரனும் - ஸ்வாமி கிருஷ்ணானந்தாஜி - 5 -

ஸ்வாமி கிருஷ்ணானந்தாஜி ஸக்ய பாவத்தில் பக்தி செய்து பகவானை காணவேண்டும் என்ற தீவிர தாபத்தை அடைந்தார். எப்பொழுதும் பகவானை நினத்து கண்ணீர் விட்டுக்கொண்டே இருந்தார். எப்பொழுது உறங்குகிறார் எப்பொழுது விழித்திருக்கிறார் என்று யாருக்கும் தெரியாது. ஏனென்றால் மாலை வேளைகளில் ஓரிரு மணிநேரம் தவிர அவரை யாரும் அருகில் சென்று கூட பார்க்க முடியாது. சில சமயங்களில் ஆவல் மிகுதியால், அவரை தரிசனம் செய்ய நள்ளிரவில் அவர் குடிலுக்கு சென்றால், அவர் அங்கு இருக்கவே மாட்டார். அருகிலுள்ள காட்டிலிருந்து கிருஷ்ண விரஹத்தில் அவர் கதறும் குரல் கேட்கும். ஒருமுறை அவரது பக்தரான ஸ்ரீராம்சரண்தா இந்தக்குரல் திசையை நோக்கி சென்று காட்டினுள் நுழைந்தார்.
அங்கே பாபா ஒரு மரக்கிளையை பற்றிக்கொண்டு நா தழுதழுக்க லோகம் ஒன்றை சொல்லிக்கொண்டிருப்பதை கண்டார். அதன் முதல் வரி-
யாமேன ஸாகம் கவாம் சாரணாய மததவாக்ரே ப்ரவதாமி தீன:
(யசோதை தாயே! தீனமாக நான் உன்னை பிரார்த்திக்கின்றேண். யாமசுந்தருடன் மாடு மேய்க்க எனக்கு அனுமதி தா!).
இதுபோல் அவரது திவ்யமான உன்மத்த நிலை, பல வருடங்கள் தொடர்ந்தது. ஒருநாள் நந்தக்ராமத்தில் ஸ்ரீகிருஷ்ணசந்திரனின் கோயிலில் பகவானைப் பார்த்து கொண்டே சண்டையிட்டு கொண்டிருந்தார். அப்பொழுது பகவானை பார்த்து கொண்டே இருந்தபொழுது, ஸ்ரீகிருஷ்ணசந்திரன் தன்னுடைய திவ்ய காந்தியை நாற்புறமும் பரப்பியவாறே ஆலயத்திலிருந்து வெளியே வந்தான். சிறிது நேரம் கழித்து மீண்டும் உள்ளே சென்று பூஜாரியிடம் "பாபாஜி என்னுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார். அவருக்குப் போய் ரொட்டி கொடு" என்றான்.
அவ்வளாவுதான்! இதன் பின் பக்தனுக்கும் பகவானுக்குமிடையில் லீலைகள் ஆரம்பித்து விட்டன. இச்சமயத்தில் க்ருஷ்ணானந்தஜிக்கும் க்வாரியா பாபாவிற்கும் இடையில் நட்பு மலர்ந்தது. க்வாரியா பாபாவும் ஸக்ய பாவத்தில் பக்தி செய்த ஒரு ஸித்த மஹாத்மா. அக்காலத்தில் அவர் ரங்கஜி மந்திரில், ஒரு அறையில் தங்கி இருந்தார். க்ருஷ்ணானந்தாஜியும் அவருடன் அங்கேயே சென்று வசிக்கலானார். இருவரும் பரபர சங்கத்தில் பரமானந்தத்தை அடைந்தனர். இருவரும் வயதில் முதிர்ந்து விட்டபோதிலும், மனதில் தாங்கள் கிருஷ்ணனின் "பால ஸகாக்கள்" என்ற பாவத்திலேயே இருந்தார்கள். ஏதோ ஒரு பாவலோகத்தில் இருவரும் எப்பொழுதும் கிருஷ்ணசந்திரனுடன் லீலைகளிலேயே ஈடுபட்டிருப்பார்கள். ஒருநாள் க்வாரியா பாபா க்ருஷ்ணானந்தரிடம் "நாம் பாடசாலையில் படிக்க வேண்டும் என்பது நந்தபாபாவின் ஆணை. அவர் என்னிடம், நீங்கள் எல்லோரும் க்ருஷ்ணனுடன் சேர்ந்து ரகளை செய்கிறீர்கள். அதனால் பள்ளிக்கூடம் செல்லுங்கள் என்றார். அதனால் நாம் இனி பள்ளிக்கூடம் செல்ல வேண்டும். இல்லையென்றால் பாபா நம்மை கோபிப்பார் என்றார். இருவரும் மறுநாளையிலிருந்து ப்ருந்தாவனத்திலுள்ள "ப்ரேம மஹாவித்யாலயா" எனும் பள்ளிக்கூடத்தில் முதல் வகுப்பில் சென்று அமர ஆரம்பித்தனர். அப்பொழுது க்ருஷ்ணானந்தஜியின் பாண்டித்யமெல்லாம் எங்கு மறைந்ததென்று தெரியவில்லை! மஹா மஹா வித்வான்களுடைய ஸந்தேஹங்களையெல்லாம் சுலபமாக நிவாரணம் செய்யும் அவர் இன்று க்வாரியா பாபாவுடன் சேர்ந்து "அ, ஆ" படிக்க ஆரம்பித்து விட்டார். இந்த பாவம் கலையும் வரை இருவரும் பள்ளிக்கு சென்றார்கள். அந்த பள்ளியின் தலைமையாசிரியர் இந்த இரு மஹான்களின் உன்னத நிலையை, அறிந்திருந்தார். அதனால் அவர் இவர்களுடைய இந்த லீலைக்கு தனது முழு ஒத்துழைப்பையும் அளித்தார். இதுவன்றோ பக்தி!!

Madhuramurali Feb2011 NEWS

ஜனவரி 1 - தஞ்சாவூர் மஹாமந்திர கூட்டுப் பிரார்த்தனை - தமிழரசி திருமணமண்டபத்தில் நடைபெற்றது. ஸ்ரீஸ்வாமிஜி அவர்கள் இதில் கலந்துகொண்டு "இதோ தீர்வு" என்ற தலைப்பில், மஹாமந்திரத்தின் ஏற்றத்தையும், தற்காலத்திற்கு அதன் அவசியத்தையும், அது அபரிமிதமான பலன்களை அள்ளித்தருவது குறித்தும் அருளுரையாற்றினார்கள். அன்றே ஸ்ரீவாமிஜி அவர்கள் தஞ்சாவூரில் ஏராளமான கோவில்களில் மஹாமந்திரத்தின் மஹிமையை மிக சிறப்பாக எடுத்துச்சொல்லிவரும் மஹிளாமண்டலியினரை கௌரவித்தார்கள். ஏறத்தாழ 4000அன்பர்கள் பிரார்த்தனை கூட்டத்தில் கலந்துகொண்டு, குருவருளும் திருவருளும் பெற்று சென்றனர். வந்திருந்த அனைத்து அன்பர்களுக்கும் பிரசாத ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

ஜனவரி 4 - ஹனுமத் ஜெயந்தி அன்று மதுரபுரி ஆரமத்தில் கன்யாகுமரி ஜயஹனுமாருக்கு ஸ்ரீஸ்வாமிஜி அவர்கள் சிறப்பு அபிஷேகமும் வடைமாலை நிவேதனமும் செய்தார். இந்த ஹனுமார் பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றுவதில் ஒரு வரப்ரசாதியாக இருக்கிறார்.


ஜனவரி 12-18 - நாரதகான சபா - ப்ருந்தாவனமும் நந்தகுமாரனும் - குளோபல் ஆர்கனைசேஷன் ஃபார் டிவினிடி இந்தியா மற்றும் டார் விஜய் டிவி இணைந்து நடத்திய நிகழ்ச்சி இது. இதில், ஸ்ரீஸ்வாமிஜி அவர்கள் பாகவதத்தில் உள்ள கிருஷ்ணனின் லீலைகளை மிகவும் விரிவாக எடுத்து அருளினார். கிருஷ்ண ஜனனம் முதல் ருக்மிணி விவாஹம் வரை இருந்த இந்த உபன்யாசத்தில் கிருஷ்ணனின் வெண்ணை லீலைகள், கோவர்த்தன உத்தாரணம், காளிங்க நர்த்தன லீலை, கம்ச வதம், பக்தர்கள் சரித்திரம் ஆகியவற்றை மிகவும் விரிவாக ஸ்ரீவாமிஜி அவர்கள் பேசினார்கள். தினமும் அரங்கம் நிரம்பி வழிந்ததால் ஏராளமானோர் அரங்கத்திற்கு வெளியில் அமர்ந்து, ஸ்ரீஸ்வாமிஜியின் உபன்யாசத்தை கேட்டு பயனுற்றனர். இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை யோகிராம்சுரத்குமார் ஆரம நிர்வாகி ஜஸ்டிஸ் ஸ்ரீஅருணாசலம், சென்னை நாரதகானசபா நிர்வாகி ஸ்ரீகிருஷ்ணஸ்வாமி, ஸ்டார் விஜய் டி.வி. Channel Head ஸ்ரீஸ்ரீராம் ஆகியோர் ஸ்ரீஸ்வாமிஜி அவர்களால் கௌரவிக்கப்பட்டனர். மேலும் விஜய் டி.வி. குழுவை சார்ந்த திரு.நாவண்ணன் மற்றும் அவரது ஒலி,ஒளி குழுவினருக்கும் ஸ்ரீவாமிஜி அவர்களால் நினைவு பரிசு அளிக்கப்பட்டது. "ப்ருந்தாவனமும் நந்தகுமாரனும்" தினமும் காலை ஸ்டார் விஜய் டிவியில் காலை 6.20மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

ஜனவரி 24 2011 வத்தலகுண்டுவில் புதிய நாமத்வார் திறப்பு விழா குளோபல் ஆர்கனைசேஷன் ஃபார் டிவினிடியை சார்ந்த ஸ்ரீசத்யநாராயணன் மற்றும் ஸ்ரீமுரளி ஆகியோர் முன்னிலையில் நடந்தது. அன்று ஸ்ரீமுரளி நாமத்வாரின் அவசியத்தையும் குருநாதரின் மேன்மை குறித்தும் பேசினார். இதில் கலந்து கொண்ட 200க்கும் மேற்பட்ட அன்பர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஜனவரி 21, 22, 24 தேதிகளில் சிவகாசி, அம்பாசமுத்திரம், பெரியகுளம், தூத்துக்குடி ஆகிய இடங்களில் மஹாமந்திர கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஸ்ரீசத்யநாராயணன் மற்றும் ஸ்ரீமுரளி அவர்கள் இதில் கலந்து கொண்டு பேசினர்.

ஜனவரி 26 2011 மும்பை ஷண்முகானந்தா ஹாலில் டாக்டர் சுப்ரமணியம் என்டோமெண்ட் லெக்சர் சபாவின் சார்பாக Practical Spirituality for Modern Times என்ற தலைப்பில் ஸ்ரீராமானுஜம் பேசினார். "முக்தி, ஆனந்தம், அன்பு இணைந்ததே ஆன்மீகம்" என்று அவர் விளக்கமாக பேசியதை ஏராளமானோர் கேட்டு பயனடைந்தனர்.

மலேசியாவில் சத்சங்கங்கள்- ஜனவரி23 - பிப்ரவரி 7வரை சென்ற வருடம் போலவே இவ்வருடமும் ஸ்ரீஸ்வாமிஜி அவர்களின் அருளாசிகளுடன், டாக்டர் பாக்யநாதன்ஜி அவர்கள் மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளில் குளோபல் ஆர்கனைசேஷன் ஃபார் டிவினிடி சார்பாக சத்சங்கங்கள் நிகழ்த்த சென்றிருந்தார். ஜன23ஆம் தேதி ப்ரேமலதாஜி அவர்கள் இல்லத்தில், சீனநாட்டவர்களுக்கான மஹாமந்திர தியான வகுப்பும், அன்று மாலை ராஜேவரிஜி அவர்கள் இல்லத்தில் மஹாமந்திர கீர்த்தனையும் இருந்தது. 24ஆம் தேதி பங்சார் பள்ளியில் மஹாமந்திர கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. அன்று மாலை "Pure Life Society"இல் (Charitable institution Headed by Honourable "Dattin" Mother Mangalam) "அன்பே கடவுள்" என்ற தலைப்பில் சரணாகதியையும் பிரார்த்தனையும் குறித்து, ஸ்ரீவாமிஜி அவர்களின் உபதேசங்களை மேற்கோள் காட்டி, டாக்டர் பாக்யநாதன்ஜி பேசியது அனைவரையும் நெகிழ்த்தியது. ஜன-25ஆம் தேதி " Timeless Wisdom of our scriptures' தலைப்பில் கோலாலம்பூர் மல்டிமீடியா யூனிவர்சிட்டியில் நமது பாரம்பரிய நூல்களின் தத்துவத்தையும் தற்கால அடிப்படைகளையும் ஒப்பிட்டு டாக்டர் பாக்யநாதன்ஜி பேசியது அனைவரையும் சிந்திக்க வைத்தது. இதில் மஹாமந்திர கீர்த்தனமே கடவுளை அடைய தற்காலத்தில் சுலபமான வழி என்று அவர் பேசினார். ஜன26ஆம் தேதியன்று யுனைட்டன் யூனிவர்ஸிட்டியில் "மஹாமந்திரமும் மனோபலமும்" என்ற தலைப்பில் மிக அழகாக மஹாமந்திர கீர்த்தனம் எங்ஙனம் மனோபலத்தை வளர்க்கிறது என்பதை விளக்கி பேசினார். இந்நிகழ்ச்சியை யுனைட்டன் யூனிவர்சிட்டியை சேர்ந்த ஸ்ரீஅர்ஜுன் மற்றும் குளோபல் ஆர்கனசேஷன் ஃபார் டிவினிடி, மலேசியாவை சார்ந்த சுனிதாஜியும் மிக அழகாக ஒருங்கிணைத்திருந்தனர். 27ஆம் தேதி சுமார் 400 அன்பர்கள் முன்னிலையில் Klang Shirdi Center இல் குருநாதரின் கருணை மற்றும் தியாகம் குறித்து டாக்டர் பாக்யநாதன்ஜி பேசியது அனைவரையும் உருக வைத்தது. இந்நிகழ்ச்சிக்காக மிக அழகாக அந்த கோவிலை சேர்ந்த பக்தர்கள் ஸ்ரீவாமிஜி பற்றிய பேனர்களை ஆங்காங்கு வைத்திருந்தனர். Ladang Seaport School, Kelana Jayaவில் ஜன28ஆம் தேதி மாணவமணிகளுக்கான மஹாமந்திர கூட்டு பிரார்த்தனை இருந்தது. Desa Cempaka school, Nilai, Negeri Sembilan Stateஇல் 28ஆம் தேதி மாணவர்களின் தார்மீகப் பண்புகளை வளர்ப்பதற்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் அவர் பேசினார். அன்றே குலபிலா முருகன் கோவிலில் அருணகிரிநாதர் குறித்தும், நாயன்மார்கள் குறித்தும் பேசினார். அதன்பின்னர் அங்கு மஹாமந்திர கீர்த்தனமும் இடம்பெற்றிருந்தது. ஜன29,30 தேதிகளில் மலேசிய கோலாலம்பூர் நாமத்வார் விழாக்கோலம் பூண்டிருந்தது. இருநாட்களிலும் ஸ்ரீஸ்வாமிஜியின் மதுரமரண சரித்திரத்தை மிக இனிமையாக டாக்டர் பாக்யநாதன்ஜி பேசினார். இதில் மதுரமான குருநாதரை பற்றி மரிப்பதான இந்த மதுரமரணமே, நமது ஆன்மீக வாழ்வின் ஆரம்பமும் பயணமும் முடிவுமாகும் என்று அவர் அழகாக எடுத்துரைத்தார். கடலூரில் ஸ்ரீஸ்வாமிஜி அவர்களின் குழந்தை பருவத்திலிருந்து, ஸ்ரீவாமிஜியின் சரித்திரத்தை பலரும் இன்புறும்படி பேசினார். (சிங்கப்பூர் சத்சங்கங்கள் பற்றிய விவரம் வரும் இதழில் இடம்பெறும்).


டிசம்பர் 2010-ஜனவரி 2011 மார்கழிமாதம் முழுவதும் "ஹரே ராம" நகர சங்கீர்த்தனம் குளோபல் ஆர்கனைசேஷன் ஃபார் டிவினிடி சார்பாக நூற்றுக்கும் மேற்பட்ட கேந்திரங்களில் பல அன்பர்களால் செய்யப்பட்டது. இதன் ஒரு அங்கமாக திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் சுற்றி நான்கு வீதிகளிலும் ஜனவரி 9 அன்று அயனாவரம் ஸ்ரீபலராமன் பாகவதர் தலைமையில் ஏற்பாடாகி இருந்தது. சுமார் 4500அன்பர்கள் இதில் கலந்து கொண்டு கீர்த்தனம் செய்தனர். மதுரபுரி கல்யாண ஸ்ரீனிவாச பெருமாள் ஆலயத்தை சுற்றி உள்ள கிராமங்களிலிருந்து 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் தினமும் பங்கேற்று மிக அழகாக நகரசங்கீர்த்தனம் செய்தனர். கலந்து கொண்ட குழந்தைகளுக்கு பொங்கலுக்கான புத்தாடையும் கொடுக்கப்பட்டது.


ஜனவரி மாதம் - குளோபல் ஆர்கனைசேஷன் ஃபார் டிவினிடி சார்பில் , சிவகாசி, வாலாஜாபேட்டை, விருதுநகர், சாத்தூர், சென்னை , திருச்சி , கோவில்பட்டி, அருப்புக்கோட்டை, காரைக்குடி, உடுமலைப்பேட்டை, தூத்துக்குடி, மதுரை ஆகிய இடங்களில் மாணவமணிகளுக்கான கூட்டு பிரார்த்தனை நடந்தது. இதில் குளோபல் ஆர்கனைசேஷன் ஃபார் டிவினிடியை சார்ந்த ஸ்ரீபாக்யநாதன்ஜி மற்றும் ஸ்ரீராமானுஜம்ஜி ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்கள் தேர்வுகளை எளிதில் சந்திப்பதற்கு ஆலோசனைகள் வழங்கி ஊக்குவிக்கும் வண்ணம் உரையாற்றினர். சென்னையில் மட்டும் 3000மாணவமணிகளும் திருச்சியில் ஒரே நாளில் 4000மாணவமணிகளும் இதில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து கூட்டு பிரார்த்தனைகளிலும் "ஹரே ராம" மஹாமந்திர கீர்த்தனம் இடம்பெற்று இருந்தது.

பாலகர்களுக்கு ஒரு கதை - கடைசி பாடம் இது!


ஸ்ரீஸ்வாமிஜி அவர்கள் குருவினுடைய உபதேசம் பற்றி விவரிக்கும்பொழுது, பண்டைய நாட்களில் சீடர்கள் குருவினுடைய அருகாமையிலேயே வாழ்ந்து அவரிடமிருந்து கற்றுக்கொண்டார்கள் என்று சொல்வதுண்டு. குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் சொற்பொழிவுகள் நிகழ்த்தி, குரு சீடர்களுக்கு உபதேசிப்பதில்லை. அவர் சொல்லும் ஒவ்வொரு சொல்லிலும், ஆற்றும் செயல்களிலும், ஒவ்வொரு அசைவிலும், வாழ்விற்கு எல்லாவிதத்திலும் வழிகாட்டும் உபதேசங்கள் இருக்கும். கவனமுள்ள சீடன் அதைப்பார்த்து பார்த்தே கற்றுக்கொள்வான்.
வட இந்தியாவில் முன்பொரு காலத்தில் பல சீடர்கள் குருகுலவாசம் செய்து தங்கள் குருவிடம் பயிற்சி பெற்று வந்தனர். அவர் ஒவ்வொரு சீடனுக்கும் கற்றுக்கொடுக்கும் விதமே தனியாக இருக்கும். ஒருபுறம் அவர்களுக்கு புராணங்கள், பக்தியூட்டும் கதைகள், சாதிரங்கள். மஹாத்மாக்களுடைய வாழ்க்கை வரலாறு போன்றவற்றை பயிற்றுவித்தார். மறுபுறம் அன்றாட வாழ்வில் நடைபெறும் சம்பவங்கள், சந்திக்கும் மனிதர்கள் என்று எல்லாவற்றிலிருந்தும் அழகான விஷயங்களை சுட்டிக்காட்டி பயிற்றுவித்தார். இப்படி பல வருடங்கள் குருகுல வாசம் சென்றது. சீடர்களும் பல சாதிரங்களையும் கற்று தேர்ச்சி பெற்று, குருகுல பயிற்சியை பூர்த்தி செய்யும் நிலையை அடைந்தனர். இறுதி தினத்தன்று குருநாதர் அவர்கள் அனைவரையும் அழைத்து ஒரு இடத்தில் அமரச்செய்து, "இன்றுடன் நீங்கள் உங்களது குருகுலவாசத்தை முடித்துக்கொண்டு, உலகிற்குள் செல்ல போகிறீர்கள். கற்கவேண்டியதை எல்லாம் கற்றாகிவிட்டது. இன்று கடைசி பாடம். மிக முக்கியமானது. அதைக்கற்றுக் கொள்ள உங்களை நான் ஒருவரிடம் அழைத்துச் செல்ல போகிறேன்" என்று கூறிக் கிளம்பினார்.
சீடர்களிடையே பரபரப்பு. "நம்மை ஒரு மிகப்பெரிய வித்வானிடம் அழைத்து செல்ல போகிறார்" என்றெல்லாம் அவர்களுக்குள் ஒரு பேச்சு. குருநாதர் அவர்களை கடைத்தெருவிற்கு அழைத்து சென்று ஒரு பென்சில் செய்யும் கடையில் கொண்டு நிறுத்தினார். சீடர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. உள்ளே சென்று ஒரு பெரியவர் பென்சில் தயார் செய்து கொண்டிருப்பார். அமைதியாக சென்று அவர் என்ன செய்கிறார் என்று கவனித்து விட்டு வாருங்கள்! இதுவே உங்களது இறுதி பாடம்! என்று கூறி அனுப்பினார்.
சீடர்களும் உள்ளே சென்று அமைதியாக அமர்ந்தனர். அப்பொழுது அவர் ஒரு பென்சிலை கையில் எடுத்துக்கொண்டு அதனிடம் பேசினார். "நீ உலகிற்குச் செல்லும் முன் ஐந்து விஷயங்களை எப்பொழுதும் நினைவில் கொள்ளவேண்டும்; அதை நீ கடைப்பிடிக்க வேண்டும்"
1. நீ உன்னை ஒரு கருவியாக நல்லவர்கள் கையில் ஒப்படைத்து வாழ்ந்தால் நீ அரிய சாதனைகள் புரிய முடியும்.
2. அவர்கள் உன்னை சரி செய்ய அவ்வப்பொழுது கூர்மைப் படுத்துவார்கள். உனக்கு அது வலியைத் தரலாம். ஆனால், அது உன் நலனைக் கருதியே என்று நினைவில் கொள்.
3. நீ செய்யும் தவறுகளை அழித்து சரி செய்யக்கூடிய வாய்ப்பு உனக்கு எப்பொழுதும் உண்டு.
4. உன்னுள் இருப்பதே உனது மிகப்பெரிய அங்கம்.
5. நீ செல்லும் இடங்களிலெல்லாம் உன் முத்திரையைப் பதிப்பாய்.
இவ்வாறு அவர் பென்சிலிடம் சொன்னது உண்மையில் தங்களுக்கே என்று சீடர்கள் உணர்ந்து தங்கள் குருவை வணங்கினார்கள்.

மகான்களின் மகிமை


ஸ்வாமி அபேதானந்தா அவர்கள் செங்கல்பட்டில் ஒரு பக்தர் வீட்டில் தங்கி பஜனையும் உபன்யாசமும் செய்து வந்தார். ஸ்வாமியின் அழகிலும் உபன்யாசத்திலும் மயங்கிய ஒரு பெண், ஸ்வாமியின் மேல் தவறாக ஆசை கொண்டு, தன்னை ஸ்வாமி மணந்து கொள்ளும்படி வேண்டினாள். திடுக்கிட்ட ஸ்வாமி அபேதானந்தா, சட்டென நாளொன்றை சொல்லி அப்பொழுது வந்தால் திருமணம் செய்யலாம் என்று சொல்லி அனுப்பினார். ஸ்வாமிகளுக்கு ஆயுர்வேதமும் தெரியும். குறிப்பிட்ட நாளன்று கடுமையாக பேதி தரக்கூடிய மருந்தை மிக அதிகமாக உண்டார். வேறு ஒருவரெனில் மரணம் சம்பவித்திருக்கும். ஸ்வாமிக்கு மருந்தினால் அதிக பேதியானது; ரத்தமும் மலமுமாக வெளியேறியதை தனியாக ஒரு மூலையில் சேகரித்து வைத்தார். உடல் கடுமையாக அசதியாகி, மூலையில் படுத்து விட்டார். அதே சமயம் அந்தப் பெண்ணும் திருமணத்திற்காக எதிர்பார்ப்புடன் வந்தாள். ஸ்வாமி அவளிடம் "என்னிடமிருந்த எதை நேசித்தாயோ அதுதான் அங்கு இருக்கிறது. அதையோ அல்லது என்னையோ தேர்ந்தெடுக்கவும்" என ரத்தமும் மலமுமாக இருந்த மூட்டையை காட்டினார். அதை அலசிய அவள், தன்னால் ஸ்வாமிக்கு மிகுந்த துன்பம் வந்ததே என வருந்தினாள். ஸ்வாமியும் அவளுக்கு நல்வார்த்தைகள் கூறி உபதேசமும் செய்து அனுப்பினார். ஸ்வாமியின் நல்வார்த்தைகளால் திருந்திய அவள், மிகுந்த நேர்த்தியான வாழ்க்கை மேற்கொண்டு பின்னர் ஒரு யோகினியாகவே வாழ்ந்தாள். மஹான்களின் ஆற்றலையும் தன்மையையும் இச்சம்பவம் நன்கு காட்டுகிறது.
----------------------------------

இப்பேர்ப்பட்ட பரமபவித்ரமான ஸ்வாமி அபேதானந்தா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மஹாரண்யம் ஸ்ரீ முரளீதர சுவாமிஜி அவர்களின் அருளாணைப்படி சைதன்ய மஹாபிரபு நாமபிக்ஷாகேந்திரா வெளியிட்டு இருக்கிறது. அனைவரும் வாங்கி படித்து பயன் பெறவும்.

உலகில் எப்பொழுதும் இருப்பது ஒன்றே - பத்மபாதர்

உலகில் உள்ள உயிரினங்களில் ஒரு மணி நேரம் மட்டுமே ஆயுள் உடையவைகள் உண்டு. ஓரிரு நாட்கள் மட்டுமே ஆயுள் உடையவைகள் உண்டு. ஒரு பத்து நாட்கள் மட்டுமே ஆயுள் உடையவைகள் உண்டு. எறும்புகள் ஒன்றரை வருடங்கள் உயிர் வாழ்கின்றன. முயல்கள் ஐந்திலிருந்து பதினைந்து ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன. ஆடு சுமார் 12ஆண்டுகள் உயிர் வாழ்கிறது. கோழிகளும் அப்படியே 12ஆண்டுகள் உயிர் வாழ்கின்றன. மாடுகள் பத்திலிருந்து இருபது ஆண்டுகள் வரை கூட உயிர் வாழ்கின்றன. சிங்கம் முப்பத்தைந்து வருடங்கள் கூட உயிர் வாழும். அதிகபட்சமாய் யானை எழுபத்தைந்து வருடங்களும், ஆமைகள் நூற்றி ஐம்பது வருடங்களும் கூட உயிர் வாழ்கின்றன. மரங்களோ பல ஆயிரம் வருடங்கள் கூட உயிருடன் இருக்கின்றன. இப்படியாக சொல்லிக்கொண்டே போகலாம். அப்படி பார்த்துக்கொண்டே பொகும்பொழுது ஒரு (Logic) லாஜிக்காக பார்த்தால், உலகத்தில் எப்பொழுதுமே, அதாவது (Infinite Years) எண்ணற்ற வருடங்கள் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய ஒன்று இருக்கலாம். ஒருபொருள் உலகத்தில் ஒரு சிறிய இடத்தை (Occupy) எடுத்து கொள்கின்றது. அதை விட ஒரு சிறிய இடத்தை, வேறு ஒரு பொருள் எடுத்து கொள்கின்றது. நிலம்(பூமி) அதிகமாக இருந்தாலும், அதுவும் இல்லாத இடம் ஒன்று உண்டு. சரி - அக்னி என்று பார்த்தால், அதுவும் இல்லாத இடம் என்று ஒன்று உண்டு. அது போல் நீர், காற்று போன்றவைகளும் இல்லாத இடம் என்று ஒன்று உண்டு. ஆனால் ஆகாயம் என்று சொல்லக்கூடிய வெற்றிடம் இல்லாத இடமே இல்லை.
சில உயிரினங்களுக்கு ஒரு அறிவு உண்டு. மற்றவைகளுக்கு இரண்டு அறிவுகள் உண்டு. இப்படியாக பார்த்துக்கொண்டே போனால், உலகத்தில் எவ்வளவு அறிவு உண்டோ அவ்வளவு அறிவும் ஒருவரிடமே இருக்கலாம். எப்பொழுதும் ஒரு பொருள் இருந்துகொண்டே இருக்கும். ஒரு பொருள் எல்லாவிடத்திலும் வியாபித்திருக்கும். ஒரு பொருளுக்கு எல்லா அறிவும் இருக்கும். ஒரு பொருள் என்றைக்குமே இருக்கும் என்று சொல்லிவிட்ட பிறகு, அந்த பொருள் எப்போது தோன்றிற்று என்ற கேள்வியே பொருந்தாது. அவரை யார் படைத்தார் என்ற கேள்வியும் பொருந்தாது. எப்பொழுதும் இருக்கும் ஒரு பொருள்தான் எல்லா இடத்திலும் இருக்கக்கூடியது. அதுவே எல்லாம் அறிந்தது என்பதில் ஆட்சேபணை இருக்க முடியாது. அந்த ஒரு பொருள்தான் கடவுள்.
உலகத்தில் உயிரில்லாத பொருளே கிடையாது. பூமி, அக்னி, வாயு, நீர், ஆகாயம் எல்லாவற்றிற்கும் உயிர் உண்டு. ஒரு மனிதன் கோமாவில் இருக்கின்றான். அவனுக்கு தன்னைச் சுற்றி நடப்பது எதுவும் தெரியாது. அவன் ஒரு ஜடம் போல் இருப்பான். அவன் உடலையே அறுத்து கிழித்தாலும், அவனுக்கு தெரியப் போவதில்லை. அதனால், அவனுக்கு உயிர் இல்லை என்று சொல்ல முடியாது. எருமை மாடு, ஆமை போன்றவைகளுக்கு உணர்வு தன்மை மிகவும் குறைந்தது. அதுபோல்தான் ஆகாயம், காற்று, அக்னி, நீர், பூமி போன்ற எல்லாவற்றிற்கும் உயிர் இருந்தாலும், அந்த உணர்வை அவைகள் வெளிக்காட்டி கொள்வதில்லை. அப்படி அவைகள் இருப்பதால்தான், உலகத்தில் அந்த பஞ்சபூதத்தை நமக்கு தகுந்தாற்போல் வளைத்து கொள்கின்றோம். எல்லா இடத்திலும் ஒரு பொருள் இருக்கின்றது. எப்பொழுதும் இருக்கின்றது. பூரணமான அறிவுடன் இருக்கின்றது என்றாலே அதை தவிர வேறு இரண்டாவது பொருள் இருக்க முடியாது. அப்படி ஒரு இரண்டாவது பொருள் இருந்தாலும் நிரந்தரமாக இருக்கக்கூடிய ஒரு பொருள் என்று சொன்னேனே, அதன் மேலே ஏற்படும் ஒரு தோற்றமாகத்தான் அது இருக்க வேண்டும்.

பாகவத பழம் - 11 - இரண்டாம் பாகம்





நைமிசாரண்யம் என்றொரு அற்புதமான புனித க்ஷேத்திரம். வியாஸர் அங்கே அமர்ந்து புராணங்களை அனுக்ரஹித்த இடம் இன்றும் உள்ளது. ஒருசமயம், தேவர்கள் பிரஹ்மாவிடம் சென்று பூலோகத்தில் தாங்கள் தவம் செய்ய விரும்புவதாகவும், அதற்குத் தகுந்த இடத்தை தெரிவிக்கும்படியும் பிரார்த்தித்துக் கொண்டார்கள். பிரஹ்மா ஒரு சக்கரத்தை எடுத்து உருட்டிவிட, அது, உருண்டு உருண்டு, ஒரு இடத்தில் போய் நின்றது. அதுதான் நைமிசாரண்யம்.

அந்த நைமிசாரண்ய க்ஷேத்திரத்தில் ஒருசமயம் ஸௌனகாதி ரிஷிகள், தங்கள் அக்னிஹோத்ரத்துடன் வந்து சேர்ந்தார்கள். ஸத்ரம் என்ற ஆயிரம் வருடங்கள் செய்யக்கூடிய யாகத்தை சங்கல்பித்து செய்ய ஆரம்பித்தார்கள். ஆயிரம் வருடங்கள் அவர்கள் உயிர் வாழ்வார்கள் என்பது என்ன நிச்சயம் என்ற கேள்வி எழும். யாகம் ஆரம்பிக்கும்பொழுதே, ம்ருத்யுவை யாகசாலையின் ஓரத்தில் ஒரு தூணில் தங்கள் மந்திர பலத்தால் பிடித்து கட்டிப்போட்டுவிடுவார்கள். யாகம் முடிந்தபிறகுதான் அவிழ்த்துவிடுவார்கள். யாகத்தில் ஓய்வு நேரம் இருக்கும். அப்பொழுது வீண்பொழுது போக்காமல், புராணங்களைக் கேட்க வேண்டும். பொதுவாக இவ்வாறு இருந்தாலும், பாகவதத்தை கேட்கும் சௌனகாதிகளுக்கு பாகவதத்தில் உள்ள ருசியைப் பார்த்தால், கதையின் விராமத்தில்தான் அவர்கள் யாகத்தை செய்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. பல புராணங்கள் யாகசாலையில்தான் அரங்கேற்றப்பட்டுள்ளன.

வேதவியாஸர் கலியுகத்தின் போக்கை நினைத்து வேதத்தை நான்காகப் பிரித்து, ஒவ்வொரு மஹரிஷியிடமும் கொடுத்து, அவர்களைக் கொண்டு அது ஒன்றையாவது ரக்ஷித்து வரும்படி கூறினார். இதிஹாச புராணங்களை ரக்ஷிக்கும் பொறுப்பை ரோமஹர்ஷணர் என்பவரிடம் கொடுத்தார். ரோமஹர்ஷணர் என்பது காரணப் பெயர். புராணங்களைச் சொல்லும்பொழுது ஒவ்வொரு சொல்லுக்கும் அவருக்கு மேனி சிலிர்க்குமாம். அதுவே, அவருக்குக் காரணப் பெயராகிவிட்டது. அவருடைய புத்திரனின் பெயர் உக்ரச்ரவஸ்; இவர்தான் பாகவதம் சொல்லும் ஸூதர். அவர் தினமும் அந்த யாகசாலைக்கு வந்து புராணம், இதிஹாசங்கள் எல்லாம் சொல்லிக்கொண்டு இருக்கின்றார். அவரைப் பார்த்து சௌனகாதி மஹரிஷிகள், "கலியில் பிறக்கும் ஜனங்கள் அல்ப ஆயுள் உடையவர்களாகவும், மந்தபுத்தி உடையவர்களாகவும், மந்த பாக்கியம் உடையவர்களாகவும் இருப்பார்களே. அவர்களுக்கு பலவிதமான காரியங்களை விதித்தால் செய்ய முடியாதே. அவர்களுக்கு என்ன கதி? என்று ஏதாவது புராணத்தில் சொல்லப்பட்டிருக்கின்றதா?'' என்று வினவுகின்றனர்.

மற்ற யுகங்களில் ஸர்வ சாதாரணமாக ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்தார்கள். தசரதர் 60,000 வருடங்கள் வாழ்ந்தாராம். அதைப் பார்க்கும்பொழுது நம்முடைய 60ம் 80ம் அல்ப ஆயுள்தானே. சந்திரனையும், செவ்வாயையும் தெரிந்துகொள்ளும் அவர்கள்(தற்காலத்தவர்) தனக்குள்ளேயே இருக்கும் ஆத்மாவை தெரிந்து கொள்ளமாட்டார்கள். அதனாலேயே "மந்தமதய:'' அறிவிலிகள்? இந்த யுகத்தில் எல்லா பாக்யமும் உடைய ஒருவரைப் பார்க்க முடியாததால் மந்தபாக்கியம் உடையவர்கள். சோம்பேறிகள்; உடல் ரீதியிலும் நோஞ்சான்கள்; உள்ளரீதியிலும் குதர்க்கிகள்; வீட்டிற்கு ஒரு பைத்தியமாவது இருக்கும். இதெல்லாம் கலியின் வைபவங்கள். சௌனகாதி மஹரிஷிகள், சூதரை பார்த்து "புராணங்கள் இதிஹாசங்களெல்லாம் தாங்கள் நன்கு கற்றறிந்தவர். வியாசருடைய அபிப்ராயத்தையும், தங்களாலேயே சரியாக எடுத்துரைக்க முடியும். ஏனெனில், மிகப்ரியமான சிஷ்யரான உங்களிடம் ஒளிவு மறைவின்றி வியாச பகவான் எல்லாவற்றையும் உபதேசித்துள்ளார்.
மேலும் அவர்கள் , "எவருடைய பெயரை அழைப்பதனால் ஒருவன் உடனே மோக்ஷம் அடைகின்றானோ, எந்த பெயரை கேட்டால் எமனே பயப்படுகின்றானோ, யாரை சென்று சேவிப்பதனாலேயே ஒருவரை புனிதப்படுத்துமோ, கங்கையை காட்டிலும் எவரது சரணத்தை தியானம் செய்து மனசாந்தி பெற்ற முனிவர்கள் மற்றவர்களை உடனே பாவனமாக்குகின்றார்களோ, அவரது கதையை சித்த சுத்தி பெற விரும்பும் எவர்தான் கேட்க மாட்டார்!!" என்று கேட்கின்றார்கள்.

இங்கே அவர்கள் கேட்கும்பொழுது, எந்த கிருஷ்ண நாமம் "யஸ: கலிமலாபஹம்" என்ற புகழுடையதோ என்று கேட்கிறார்கள். பிரத்யேகமாக கிருஷ்ண நாமத்திற்கு கலியின் தோஷங்களை போக்கடிக்கும் புகழ் உள்ளது என்று இங்கே கூறப்பட்டு உள்ளது. மற்ற எந்த நாமத்தை காட்டிலும் கிருஷ்ணநாமத்திற்கே இந்த புகழ் உண்டு. சௌனகாதி ரிஷிகள் கேட்ட விஷயங்களை ஆறு கேள்விகளில் அடக்கலாம்.

1. ஸகல ஜனங்களும் ச்ரேயஸ்ஸை அடைய சுலபமான நிச்சயமான வழி என்ன?
2. வஸுதேவருக்கும் தேவகிக்கும் குழந்தையாகப் பிறந்த பகவான் ஸ்ரீகிருஷ்ணனின் அவதார நோக்கம் என்ன?
3. உலகத்தின் ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரங்களை எங்களுக்கு விரிவாகக் கூறுங்கள்.
4. பகவானின் மற்ற அவதாரங்களைப் பற்றிக் கூறுங்கள்.
5. ஸ்ரீ கிருஷ்ணாவதார சரிதம் விரிவாகக் கூறுங்கள்.
6. கலியுகத்தில் தர்மம் யாரை சரணம் அடைந்தது? "தர்ம: கம் சரணம் கத:'' என்பதுடன் முதல் அத்யாயம் முடிகின்றது.

பக்தர்களின் கேள்விகளுக்கு ஸ்ரீ ஸ்வாமிஜி அவர்களின் பதில்கள்


கேள்வி: பகவான் எங்கே இருக்கின்றான்?

பதில்: எங்கே ஒருவருடைய தலை பணிகின்றதோ, அங்குதான் இறைவன் உள்ளான்.

கேள்வி: பக்தி கதைகளை தத்துவத்துடன் கேட்பது எதைப்போன்றது?

பதில்: ஒரு குழந்தையும், அந்த குழந்தையின் தந்தையும் சேர்ந்து நெய், முந்திரி பருப்பு, சர்க்கரை, பாதாம்பருப்பு இவற்றினால் கலந்து செய்யப்பட்ட பாதாம் அல்வாவை சுவைக்கின்றார்கள். அப்பொழுது இருவர் கைகளிலிருந்தும் சிறிது கீழே சிந்துகின்றது. தந்தையும் அதை பொறுக்கி எடுத்து வாயில் போட்டுக்கொள்கின்றார். இவ்வளவு உயர்ந்த பொருள் வீணாகக்கூடாது என்ற காரணமும் அதில் அடங்கும். (நெய், முந்திரி, பாதாம் கலந்த அல்வா அல்லவா!) கீழே சிந்திய பாதாம் அல்வாவை, குழந்தையும் எடுத்து வாயில் போட்டுக் கொள்கின்றது. நல்ல இனிப்பாயிருக்கின்றது என்ற ஒன்று மட்டும்தான் இதற்கு காரணம். அதுபோல், பகவானுடைய மஹிமை தெரிந்து பக்தி செய்பவர்களுக்கும், மஹிமை தெரியாமல் பக்தி செய்பவர்களுக்கும் அனுபவம் ஒன்றுதான். தத்துவம் தெரிந்தால் மஹிமை புரியும். மஹிமை தெரிந்தால் கௌரவம் அதிகரிக்கும். மஹிமை தெரியாமல் பக்தி செய்தால் ரஸம் அதிகரிக்கும்.

கேள்வி: உலகத்தில் எது பாக்யம்?
பதில்: பணத்தை அடைவதோ, புகழை அடைவதோ, பெரிய பதவியை அடைவதோ, வித்வத்தை அடைவதோ, பல பட்டங்களை பெறுவதோ, அழகை அடைவதோ, நீண்ட நாட்கள் வாழ்வதோ இவைகளில் எதை அடைந்தாலும் அவன் பாக்யவான் அல்ல. எவன் ஒருவன் தான் திரும்பி பிறக்காததற்கான வழியை தேடிக்கொள்கிறானோ அவனே பாக்கியவான்.

ஒரு சாதகரின் டைரிக்குறிப்பு - 8

வெகு நாட்களாக ஒரு மஹாத்மாவின் ஆஸ்ரமத்திற்கு போகவேண்டும் என்று ஆசைப்பட்டுக்கொண்டு வந்தேன். எல்லாவற்றிற்கும் ஒரு நேரம்  வர வேண்டுமோ என்னவோ! திடீர் என்று ஒருநாள் அந்த மஹாத்மாவின் ஆஸ்ரமத்திற்கு செல்ல வேண்டுமென்ற ஆவல் அதிகமாகி, அது ஒரு உந்துதலாக மாறியது. அதை என்னால் அடக்கவே முடியவில்லை.


                              இரவு முழுவதும் தூக்கமே வரவில்லை. அந்த ஆரமத்திற்கு போக வேண்டுமே என்று ஒரே தவிப்பு. தூக்கம் வராமல் இதே சிந்தனையுடன் படுத்துக்கொண்டிருந்த பொழுது, என்னுடைய பக்கத்தில் அமர்ந்து நாதஸ்வரம் வாசிப்பது போன்று நாதஸ்வர இசை அவ்வளவு துல்லியமாக என் காதுகளில் கேட்டது. நானும் எழுந்து பக்கத்து வீடுகளில் ஏதாவது தொலைக்காட்சி அல்லது வானொலியில் இருந்து, இந்த சப்தம் வருகின்றதா என்று பார்த்தேன். ஆனால், அப்படி எதுவும் இல்லை. தூக்கமும் இல்லை. விழிப்பும் இல்லை. அப்படி, இருநிலையிலேயே, இரவை கழித்தேன்.  மறுநாள் காலை கிளம்பி மாலை அந்த ஆஸ்ரமத்திற்கு போய் சேர்ந்தேன். எனக்கு தூக்கி வாரி போட்டது. ஏன்? நேற்று இரவு எந்த ஒரு நாதஸ்வர இசையை இரவு முழுக்க கேட்டேனோ, அதே இசையை அங்கு நேரில் சில நாதஸ்வர வித்வான்கள் அமர்ந்து வாசித்துக்கொண்டிருந்ததை கேட்டேன். அதே கீர்த்தனம். அடுத்தடுத்து நான் கேட்ட அதே கீர்த்தனங்களே வாசிக்கப்பட்டன. இதை என்னவென்று சொல்வது? இதுவும் ஒரு அனுபவம்.

மதுரமான மஹனீயர் - 179 Dr.A.Bhakyanathan

பகவானுடைய சான்னித்யம் நாளுக்கு நாள் குறையாமல் இருக்க வேண்டும். குறையாமல் இருந்தால் மட்டும் போதாது; நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கவேண்டும். எந்த இடத்தில் வேதபாராயணம், இதிஹாஸபுராணங்களின் பாராயணங்கள், அர்ச்சனம், உத்ஸவாதிகள், கீர்த்தனம், பக்தர்கள் சத்சங்கம், அன்னதானம் ஆகியவை நடைபெறுகிறதோ அவைகளினால் அங்கு சான்னித்யம் வளரும்.


              சில மூர்த்திகள் அர்ச்சாவதாரமாக மாறும்பொழுதே, தானாகவே அதில் ஒரு சான்னித்யம் வந்துவிடுவதும் உண்டு. சில மூர்த்திகள் பிரதிஷ்டை பண்ணக்கூடிய க்ஷேத்ரங்களின் மஹிமையினால் சான்னித்யத்துடன் விளங்குவதும் உண்டு.

            நம்முடைய ஆஸ்ரம வளாகத்தில் பிரதிஷ்டை ஆகி உள்ள கன்யாகுமரி ஜயஹனுமார் மூர்த்தி, எல்லாவிதத்திலும் சர்வ சான்னித்யத்துடன்  விளங்கி வருகின்றார். பக்தர்களுடைய பலதரப்பட்ட பிரார்த்தனைகள் ஸர்வ சுலபமாக நிறைவேறுவதால், அதைக் கேள்விப்பட்டு பக்தர்கள் அநேகர் வந்து ஹனுமாரை சேவித்து ஆனந்தம் அடைகின்றார்கள்.
  
              பகவான், தான் சான்னித்யத்துடன் விளங்குவதை பலவிதத்திலும் சுமுகமாக தெரிவிப்பார். வைத்தியநாதன் என்பவர்தான் தினமும் இந்த ஹனுமாரை சிரத்தையுடன் பூஜை செய்து வருகின்றார். ஹனுமார் ஸுப்ரஸன்னமாக இருந்து வருகின்றார். அவரை நன்றாக கவனித்துப் பார்த்தால், தம்மைத் தேடி வரும் பக்தர்களின் கஷ்டங்கள் விலக, ஆழ்ந்த ராம தியானமும், ஸதா ஜபமும் செய்து வருவது நன்றாக தெரியும். ஒருநாள் வைத்தியநாதன் ஹனுமாருக்கு சுமார் ஒரு கிலோ அளவுள்ள  வெண்ணையை நிவேதனம் செய்து, அதை அவருடைய ஸன்னதியிலேயே வைத்திருந்தார். மறுநாள் காலையில் அந்த வெண்ணையை எடுக்கலாம் என்று சென்றபொழுது, ஹனுமாரின் ஒரு பெரிய கை அதில் பதிந்திருந்தது நன்றாக தெரிந்தது. வைத்தியநாதனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.
 
            ஸ்ரீஸ்வாமிஜி அவர்கள் சன்னதிக்கு சேவிக்க வரும்பொழுது வைத்தியும் இந்த விஷயத்தை ஸ்ரீஸ்வாமிஜி அவர்களிடம் தெரிவித்தார். ஹனுமார் கரபர்ஸம் பட்ட அந்த வெண்ணையையும் காண்பித்தார். ஹனுமாரின் பிரத்யக்ஷ சான்னித்யத்தை உணர்ந்து ஸ்ரீஸ்வாமிஜி அவர்கள் மிகவும் சந்தோஷப்பட்டார்கள். அந்த ஹனுமாரின் கரபர்ஸம் பட்ட வெண்ணை பிரசாதத்தை தானும் எடுத்துக்கொண்டு, கூடியிருந்த பக்தர்களுக்கும் கொடுத்து அனுக்ரஹித்தார்கள்.