Sunday, April 3, 2011

ஸ்வாமி முக்தானந்தர் தன் குரு நித்யானந்த மஹாராஜ் பற்றி கூறியது


எனக்கு இளமையிலேயே கடவுளைத் தவிர உயர்ந்த வஸ்து ஒன்றும் இல்லை என்றும், அவரை நண்பனாக்கி கொள்வதை விட சிறந்தது ஒன்றுமில்லையென்றும் அவரை விட நம்பத்தகுந்த நண்பர் ஒருவருமில்லையென்றும் தெளிவாக தெரியும். அதனால், கடவுளை நண்பனாக்கிக்கொள்ள விரும்பினேன். ஆனால், அது மிகவும் கடினம் என்றனர். ஆதலால் கடவுளின் நண்பர் ஒருவரை தேடி சென்றேண். அப்படி ஒருவரை நான் தேடி கண்டுபிடித்தேன். அவர் சர்வ வல்லமை வாய்ந்த கடவுளின் நண்பர். அந்த நண்பரே என்னையும்  கடவுளுக்கு நண்பனாக்கினார். இப்பொழுது இவ்வுலகில் நண்பர்களைத் தேடுவதை விட எனது முக்கிய பணி என்னவென்றால், மக்களை அவருக்கு நண்பராக்கி விடுவதுதான். - ஸ்வாமி முக்தானந்தர் தன் குரு நித்யானந்த மஹாராஜ் பற்றி கூறியது

No comments:

Post a Comment