Sunday, April 3, 2011

Other Important News of April Issue


Advertisements in April Issue


Sayings of Maharanyam Sri Muralidhara Swamiji


1. நாம், வயது வளர்ந்து கொண்டே இருக்கின்றது என்று சந்தோஷப்பட்டு பிறந்த நாள் கொண்டாடி வருகின்றோம். அப்பொழுது, நம்மை அறியாமல் ஒரு விஷயத்தை மறந்து விடுகின்றோம். நமக்கு இந்த பிறவியில் இறைவனை அடைய இருக்கும் காலம் குறைந்து கொண்டே வருகின்றது என்பதுதான் அது.

2. ஒரு பொருளை பார்த்தவுடன், அந்த பொருளை வைத்துக்கொண்டே, பல ஆராய்ச்சிகள் செய்து, அது எப்படி வந்தது, யார் செய்தது, அதன் ரஸாயனம், இவற்றை தெரிந்து கொள்ளலாம். இப்படித்தான், உலகை பற்றி பல ஆராய்ச்சிகள் செய்து, அதன் தன்மையை வெளிப்படுத்திக்கொண்டு இருக்கின்றார்கள் விஞ்ஞானிகள். அந்த பொருளை செய்தவனிடமே அதைப்பற்றி கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். அப்படித்தான், ரிஷிகள், பகவானிடமே கேட்டு இந்த பிரபஞ்சத்தின் தன்மை, படைப்பின் ரகசியம் எல்லாம் நமக்கு எடுத்து கூறியுள்ளார்கள்.

3. ஒருவனுக்கு குரு கிடைப்பது அவனுக்கு அமிர்த கலசம் கிடைப்பது போல; கிடைத்தும் அவர் சொன்னதை கேட்காமல் இருப்பது என்பது, அப்படி கிடைத்த அமிர்த கலசத்தை கை தவறி கீழே போட்டு உடைப்பது போல.

4. பக்தர்கள் பகவானை அடைவதற்காக சாதனைகள் செய்வார்கள். அவதார புருஷர்களை குருவாக கிடைக்க பெற்றவர்களோ கிடைத்த பகவானுக்காக சாதனைகள் செய்கின்றார்கள்.

5. பகவானுக்கு புஷ்பங்களால் அர்ச்சனை செய்தேன். அப்பொழுது இந்தக் கைகளால் பகவானுக்கு அர்ச்சனை செய்ய நாம் எவ்வளவு புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். புஷ்பங்கள் எவ்வளவோ மலர்ந்து, பிணத்திற்கும் பலதரப்பட்ட மனிதர்களுக்கும் போய் சேருகின்றன. அப்படி இருக்க, இந்த புஷ்பங்கள் பகவானுடைய திருவடியை அடைய பாக்யம் செய்து இருக்கின்றன என்ற எண்ணம் ஏற்பட்டது. "இல்லை, இல்லை! அந்த பூ தானாக இங்கு வந்து சேருமா? அதை பறித்து, தொடுத்து, இங்கு கொண்டு வந்து சேர்த்திருக்கின்றாரே, அவர்தான் புண்ணியம் செய்துள்ளார்" என்று தோன்றியது. மொத்தத்தில் மூவருமே பாக்யம் செய்துள்ளார்கள் என்பதே உண்மை.

-மஹாரண்யம் ஸ்ரீமுரளீதர ஸ்வாமிஜி

Sayings of Sri Marudhanallur Sadhguru Swamigal


1. சாஸ்திர விஷயத்தில் உண்மையான சந்தேகத்தை உண்மையாக சந்தேகம் உள்ளவனுக்கு, சாஸ்திரத்தை எடுத்து சொல்லி நிவர்த்தி செய்து விடலாம். ஆனால் விதண்டாவாதம் செய்பவர்களுக்கு சாஸ்திரத்தை எடுத்து சொல்லியும் எந்த பலனும் ஏற்படாது. கண்பார்வை சரி இல்லை என்றால் கண்ணாடி அணிந்து கொண்டு சரி செய்யலாம். கண்ணே தெரியாதவர்களுக்கு கண்ணாடியால் என்ன பலன் ஆகப்போகின்றது?

2. பகவத்குணத்தை எந்த மொழியிலும் சொல்லலாம்; கேட்கலாம்..

-ஸ்ரீ மருதாநல்லூர் ஸத்குரு ஸ்வாமிகள்

Sanathana pudhir


சனாதனப் புதிர் - பகுதி - 26
-ஆத்ரேயன்

1.கங்கை, யமுனை நதிகள் ரிக் வேதத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
2.ரிக் வேதத்தில் அதிகமாக காணப்படும் இரண்டு நதிகளின் பெயர் என்ன?
3.இப்பொழுது நடைமுறையில் இருக்கும்  ஹரிச்சந்திர உபாக்யானத்தின் ஆதாரம் எங்கு காணப்படுகிறது?
4.28 விதமான நரகங்களைப் பற்றி ஒரு புராணம் விஸ்தரிக்கிறது. எந்த புராணம்? எத்தனை நரகங்கள்?
5.அம்பாளின் 108 பீடங்கள் எங்கு விவரிக்கப்படுகின்றன?

1.             முதல் நாள் யுகாதி ; சுக்ல பக்ஷ அஷ்டமி  - அசோக அஷ்டமி (துர்கா பூஜை) சுக்ல பக்ஷ நவமி- ராம நவமி ; கிருஷ்ண பக்ஷ பஞ்சமி - மத்ஸ்ய ஜயந்தி ; கிருஷ்ண பக்ஷ சதுர்தசி - வராஹ ஜயந்தி.
2.             ஸ்வயம்பு மனுவின் இரண்டாவது பெண். கர்தமரின் மனைவி - பத்து குழந்தைகள் - அருந்ததி , அனஸூயா , கபிலர் முக்கியமானவர்கள். கபிலர் தனது தாயான தேவஹூதிக்கு உபதேசம் செய்தார்.  கபில கீதை என்று அழைக்கப்படுகிறது (பாகவதம்  3-25-33)
3.             அஹன்யா- ரிக்வேதம்  ( 4.1.6 ; 8.69.2 )
4.             இவர் ஒரு பிராமணர். விஷ்ணு பக்தனின் சாபத்தால் பிருந்தாவனத்தில் மூங்கிலாக பிறக்கிறார். அந்த மூங்கில் வெட்டப்பட்டு, புல்லாங்குழலாக மாற, அதை பகவான் கிருஷ்ணன் இசைக்க, தேவவ்ரதன் என்ற பிராமணர் முக்தி அடைகிறார். (பத்ம புராணம் - பாதாள காண்டம் - சர்க்கம்  73 )
5.             சக்ரபுஷ்கரணி
6.             ஆரண்ய; ஆஸ்ரம; பாரதி; கிரி; பர்வத; பூரி; சரஸ்வதி; சாகர; தீர்த்த; வன;
7.             கிருஷ்ண யஜூர் வேதம் -  33 ஸ்லோகங்கள் - 5 மந்திரங்கள்.
8.             சந்திர வம்சத்து அரசனான ப்ரதீபனின் பிள்ளை. இவருடைய தம்பியின் பெயர் சாந்தனு. தேவாபி குஷ்ட ரோகத்தால் பீடிக்கப்பட்டு இருந்ததால், துறவறம் மேற்கொண்டார். பீஷ்மரின் பெரியப்பா.
9.             அங்க தேசத்தின் தலைநகர் - இராமாயண காலத்தில் - ரோமபாதர் -மஹாபாரத காலத்தில் - கர்ணன் பீஹாரில் -  பாகல்பூர் அருகில் உள்ள நாத்நகர்.
10. அதர்வ வேதம். 32 மந்திரங்கள். இவைகளில் நவாக்ஷரி, பஞ்ச தசாக்ஷரி முதலியவை அடங்கும்.

ஸுபாஷிதானி - Slokam on Sri Swamiji


ஸுபாஷிதானி
பும்ஸாணாம்  தன்ய: ந ஜீவன்முக்த: ந அஷ்டாங்கயோக சித்த:
ய ஸ குருசரணதீர்த்தம் அபிபத் ஸ வை மஹாபாக்ய:  
ஸ்ரேஷ்டோ அஸ்தி ந தானபதி ந தர்மாத்மா
பரன்து யஸ்ய மனஸி வாசி ஆத்மனி ச ஸ்ரீஹரி

யதா மத்ச்யாயாப: ககாயகாஷ: தேஹாயாத்மா
பும்ஸாய அஸ்திஆவஸ்யம் குருக்ருபா

ய விஷ்வஸிதி ஸ்வபலே அதவா பகவத்க்ருபாயாம் மாத்ரம்
லோகே ந  த்வயோ: ஸ: ஏவ மூட:

யஸ்ய கடாக்ஷே ஸர்வபாப ப்ரணாஸதி
யஸ்ய தர்சனம் நிஜ ஆனந்தம் ததாதி
யஸ்ய வாக் லோசநஞ்ச மதுரம்
தஸ்மை ஸ்ரீ குரவே நம:                        - சிறுவன் ஸ்ரீசித்தார்த் ராம்

அமைதி தவழ வேண்டி ஒரு பிரார்த்தனை...


 நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்கள் கொண்டதுதான் இப்பிரபஞ்சம். இவை ஒன்றுடன் ஒன்று இயைந்து இருக்கும் வரையில் உலகில் இயற்கை சீராக இயங்குகிறது. இவற்றில், ஒன்று கொஞ்சம் தனது இயல்பிலிருந்து மாறுபட்டு சீற்றம் கொண்டால் கூட அதை நம்மால் தாங்க முடியாது. புயல், மழை, வெப்பம், நிலச்சரிவு என இப்படி ஒவ்வொன்றும்  விபரீத விளைவுகள் தருபவைதானே! அப்படி இருக்க, அண்மையில் ஜப்பான் நாட்டில் முதலில் பூகம்பமும், சுனாமியும், பின் தீ விபத்தும் ஒன்றன்பின் ஒன்றாய் பெரிய அளவில் வந்து  இருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக  இந்த நவீன காலத்தில் மிகவும் அச்சம் தரக்கூடிய அணுக்கதிர் வீச்சும் ஏற்பட்டு இருக்கிறது. இந்த பேரழிவு தரக்கூடிய ஆபத்துக்கள் அனைத்தும் ஒரே சமயத்தில் வந்து அந்நாட்டு மக்களுக்கு சொல்ல முடியாத துயரத்தையும் அச்சத்தையும் தந்திருக்கிறது. அவர்கள் அதிலிருந்து மீள பல காலம் பிடிக்கும். இதுவரை அந்நாடு சந்தித்த ஆபத்துக்களில் இதுவே அதிக அழிவையும் அச்சத்தையும்  தந்து இருக்கிறது. அதுபோலவே, மத்திய கிழக்காசிய நாட்டு மக்களும் கடுமையான வன்முறை செயல்களினால் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்கள் அனுபவித்து வரும் துயரத்தை உலகம் முழுவதும் பார்த்தும் ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கிறது. இந்த நிலைமை மாறி சீரடையவும், இப்படி இயற்கை சீற்றங்களும் வன்முறை சம்பவங்களும் ஏற்படாமல் விலகவும், அமைதியும் சந்தோஷமும் உலகமக்கள் மனதில் நிரந்தரமாக நிலவவும், நாம் எல்லோரும் சேர்ந்து "ஹரே ராம" மஹாமந்திரம் சொல்லி கடவுளிடம் பிரார்த்தனை செய்வோமாக.

ஸ்வாமி முக்தானந்தர் தன் குரு நித்யானந்த மஹாராஜ் பற்றி கூறியது


எனக்கு இளமையிலேயே கடவுளைத் தவிர உயர்ந்த வஸ்து ஒன்றும் இல்லை என்றும், அவரை நண்பனாக்கி கொள்வதை விட சிறந்தது ஒன்றுமில்லையென்றும் அவரை விட நம்பத்தகுந்த நண்பர் ஒருவருமில்லையென்றும் தெளிவாக தெரியும். அதனால், கடவுளை நண்பனாக்கிக்கொள்ள விரும்பினேன். ஆனால், அது மிகவும் கடினம் என்றனர். ஆதலால் கடவுளின் நண்பர் ஒருவரை தேடி சென்றேண். அப்படி ஒருவரை நான் தேடி கண்டுபிடித்தேன். அவர் சர்வ வல்லமை வாய்ந்த கடவுளின் நண்பர். அந்த நண்பரே என்னையும்  கடவுளுக்கு நண்பனாக்கினார். இப்பொழுது இவ்வுலகில் நண்பர்களைத் தேடுவதை விட எனது முக்கிய பணி என்னவென்றால், மக்களை அவருக்கு நண்பராக்கி விடுவதுதான். - ஸ்வாமி முக்தானந்தர் தன் குரு நித்யானந்த மஹாராஜ் பற்றி கூறியது

அப்பாலுக்கு அப்பால் - அல்லமபிரபு -1


அல்லமபிரபுவின்  பிறப்பு குறித்து இருவேறு கருத்துக்கள் உள்ளன. இரு செய்திக்குறிப்புகளுமே இவர் ஒரு மிக சிறந்த யோகீச்வரரை அதிசயமாக சந்தித்ததன் பின்  உலகம் போற்றும் மிக சிறந்த குரு ஆனார் என்கிறது. கன்னட மொழியில் பிரபுலிங்கலீலை என்று எழுதப்பட்ட காவியம்தான் இவரது சரித்திரத்திற்கு முக்கிய ஆதாரம். அல்லமபிரபுவின் கவிதைகள் மிக பிரசித்தி. ரமணமஹரிஷிகளும் இவரது ஒரு வசனத்தை அடிப்படையாக கொண்டே தமது கிரந்தமான உள்ளது நாற்பதில் ஒரு பாடலை அமைத்தார் என்பர். வீரசைவ மதத்தின் நடுநாயகம் இவர்.  நாயன்மார்களில் முதன்மையானவரான சுந்தரர் பிறப்பெடுக்க காரணமாக கைலாயத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. அதுபோலவேதான் அல்லமபிரபுவின் பிறப்பிற்கும் ஒரு சுவையான சம்பவம் காரணம் எனப்படுகிறது. சண்டேவரரேயே பிருங்கீசர் என்பர். அவர் கைலாயத்தில்  சிவபெருமானின் அருகில்  இருந்து  கைங்கரியம்  செய்பவர் . அவர் ஒருமுறை சிவபெருமானை மிகவும் புகழ்ந்து போற்றினார். அருகிருந்த பார்வதி தேவியை அவர் துதிக்கவில்லை. பார்வதி மிகவும் வருத்தப்பட்டு, "அப்படி செய்தது தவறு" என கூறுகையில் சண்டேஸ்வரர் "தாங்களும் சிவபெருமானுக்குள் அடக்கம். மேலும் முத்து நீரில் கிடைத்தாலும் நீரை விட அது வேறல்லவா? தங்கம் பூமியில் இருந்தாலும் அது பூமியில் இருந்து வேறு அன்றோ? அது போல் உலகமனைத்திலும் அவர் இருந்தாலும், உலகமனைத்திற்கும் தாயான தாங்கள் அவருடனே இருந்தாலும் அவர் தங்களிடமிருந்து தனித்தவரே" என்றார். இது குறித்து தேவ தேவியருள் வாதம் உண்டாயிற்று.  ப்ருங்கீசரை அல்லமபிரபுவாக பரமசிவன் பிறக்க வைத்தார். மேலும் தேவியை பார்த்து "அல்லமபிரபு மாயையில் மயங்காதவர். நீ வேண்டுமானால் பரீக்ஷை செய்து பார்" என்றார். பார்வதியின் தமோகுண அம்சமாக மாயை என்று ஒரு பெண் பிறந்தாள். இவள் மமகாரராயன்  எனும்  பணவாசி(இது கர்நாடகத்தில் உள்ளது)  மன்னனுக்கு மோகினி தேவி என்பவளிடம் பிறந்தாள். பணவாசி அக்காலத்தில் இருந்த மிக சிறந்த நகரமாக சொல்லப்படுகிறது. தேவர்களும் இந்நகரின் பெருமையை குறித்து பேசி வந்தனர். அந்நகரத்தில் இல்லாத வளங்களே இல்லை. உயர்ந்த கட்டிடங்களும் அழகிய கோட்டையும் நல்ல பலமுள்ள சேனையும் நல்ல சமுதாயமும் இயற்கை வளங்களும் அநேகம்  பொருந்திய இப்படிப்பட்ட பணவாசியில் பிறந்த மாயை மிக அழகாக இருந்தாள். மிக அழகாக பேசுவாள். இவள் அனைவருக்கும் ஹிதத்தை செய்து வந்தாள். மாயையின் சாதுரியமும் அழகும் அவளுடைய பெற்றோருக்கு மிகுந்த ஆனந்தத்தை கொடுத்தது. புத்திசாலியான இவள் தான் மனதில் நினைப்பதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் எப்பொழுதும் புன்சிரிப்பாலும் தனது அழகாலும் அனைவரையும் கவர்ந்தாள். அவளைக்கண்டு மோகிக்காத ஆடவரே இல்லை.  இதே சமயத்தில் அல்லமபிரபுவும் அயோனிஜராய் ஓரிடத்தில் அவதரித்தார்.  நிரஹங்காரர்,  சுஞான தேவி எனும் உத்தம தம்பதிகள் உண்மையை எடுத்துரைக்கும் ஒரு சிறந்த பக்தனே தங்களுக்கு புத்திரனாக பிறக்க வேண்டும் என்று பரமசிவனை நோக்கி தவம் இருந்தனர். அவர்களால்  கண்டெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டார் அல்லமபிரபு. அல்லம பிரபு  பெரியவராக வளர்ந்த பின் தம் தாய், தந்தையருக்கு முக்தி அடையும் வழியை உபதேசித்து  விட்டு பணவாசி சென்றார். அங்குதான் மாயை சங்கீத வித்வான்களிடம் நாட்டியமும் சங்கீதமும் பயின்று வந்தாள். அல்லமபிரபுவிற்கும் மாயைக்கும் அங்கு பரிச்சயம்  ஏற்பட்டது. மாயை கோவிலில் பாடிக்கொண்டே ஆடுவாள். அப்பொழுது அல்லமபிரபு அங்கு வந்து வாத்தியம் வாசிப்பார். ஒன்றை ஒன்று விஞ்சும் விதமாக இருக்கும். வாத்திய இசையில் மயங்கிய மாயை தன் மனதை அல்லமரிடம் பறிகொடுத்தாள். அல்லமரும் அவளிடம் அன்பு பாராட்டி வந்தார். மோகவசத்தால் ஒருமுறை மாயை தனிமையில் அல்லமரை கட்டி கொண்டாள். அதிசயமாக, அவளால் அல்லமரை கட்டிக்கொள்ள முடியவில்லை.

மாலே மணிவண்ணா - 94 - மகா வித்துவான் மயிலம் வே.சிவசுப்பிரமணியன்


முதல், துணை, நிமித்த காரணன் ஆக ஜகத்துக்கு எம்பெருமானே விளங்குகிறான் என்ற கருத்தை விஷ்ணு ஸஹஸ்ர நாமம் தன் தொடக்கத் திருநாமத்திலேயே சொல்லிவிடுகிறது.
      1.விவம் - எல்லாமாக இருப்பவர் - உலகில் உள்ள எல்லாமும், உலகமும் அவரே; இறைவனைச் சொல்லால் குறிப்பிடுவது ப்ரணவம். பரம்பொருளும் அதன் விரிவான உலகமும் ஓங்காரமே. பரம்பொருள் உலகமாகக் காரியப்படும் நிலையில் முதலில் தோன்றியது ஆகாசத்தின் தன்மாத்திரையான ஒலிதான். அந்த ஒலியின் முதல் விளக்கம் "ஓம்" எனும் ப்ரணவம். அதனால் பரம்பொருளுக்கு விளக்கம் தரும் வேதத்தை ஓதத் தொடங்குகையில் முதலில் ஓங்காரம் இடம்பெறுகிறது. பிரணவத்தில் தொடங்கி பிரணவத்தில் முடிவதால், வேதமும் பரம்பொருளாகிறது. பிரணவம் உலகத்தில் எல்லா சப்தத்திலும் விரவி நிற்கிறது. உலகமாக விரிய இருக்கும் பரம்பொருளின் முதல் தோற்றம் ஒலி; அதிலிருந்து எல்லாமும். ஆகவே பிரணவமும் விவம். ஆகவே எல்லாமாய் இருப்பவர் இறைவனே. எல்லையற்ற பரிசுத்தமான மங்கள குணங்கள், பெருமை, இவை எம்பெருமானிடம் எல்லையற்ற  கருணையோடு கூடியுள்ளன. அவர் ஸ்வயம் பரிபூரணர். அதனால் விஷ்ணு விவம் ஆகிறார்.
2. விஷ்ணு - எங்கும் நிறைந்திருப்பவர். உள்ளும் வெளியும் பரவி இருப்பவர். தேசம், காலம், பொருள் இவற்றால் அடங்காமல் பரவி இருக்கும் தன்மையே விஷ்ணு. தன்னால் படைக்கப் பெற்ற எல்லாவற்றிலும் தான் நுழைந்திருப்பவர். அவற்றின் இருப்பை நிலைப்படுத்தவே அவர் அவ்வாறிருக்கிறார்.
5. பூதக்ருத்  - எல்லாவற்றையும் தோற்றியவர்.
6. பூதப்ருத்  - எல்லாவற்றையும் தாங்குபவர்.
7. பாவ: - எல்லாவற்றின் இருப்பாகவும், இருக்கும் பொருளாகவும் இருப்பவர். பகவானது இருப்பு உலக வடிவில் உணரப்படுகிறது. உலகை ஒதுக்கித் தனித்தும் அவருக்கு இருப்பு உண்டு. எல்லாவற்றிலும் கலந்து எல்லாவற்றையும் நிலைப்படுத்துகிறார்.
8. பூதாத்மா  எல்லாவற்றிற்கும் ஆத்மாவாக இருப்பவர். இந்தத் திருநாமங்களின்  மூலம் எம்பெருமானே உலகம் - சர்வமும் அவரே என்கிற செய்தி தெளிவாகிறது.
இந்த வகையில் எம்பெருமான் "உலகைப் படைத்து உலகில் நுழைந்து உலகாய் நிற்கிறான்" என்பதை வைத்தே அவன் தனிமாயை ஒருவரால் அறிதற்கரியது என்று ஆழ்வார்கள் கூறி ஆராதித்தார்கள்.
தூயக்கறு மதியில் நல் ஞானத்துல் அமரரைத் துயக்கும்
மயக்குடை மாயைகள் வானிலும் பெரியன வல்லன்
என்பார் நம்மாழ்வார் திருவாய்மொழியில் (1-3-10). "எதுவரை உள்ளது எங்கு சென்று முடிவது என்று அளவிடமுடியாத, அவனால் தோன்றி அவனுள் அடங்கும் இந்த ஆகாயத்தினும் "மயக்குடை மாயைகள் பெரியன வல்லன்" என்று ஆழ்வார் வியக்கிறார்.
உலகப் படைப்பு நிகழுமாற்றைத் தத்துவங்களின் மூலமாகச் சொல்வது சமயங்களின் வழிமுறையாகும்.
சைவசமயம் 36 தத்துவங்கள் என்று சொல்லும். சிவதத்துவம் 5. வித்தியாதத்துவம் 7. ஆன்மதத்துவம் 24 என்பது அதன் விரிவாகும். உலகம் 24 தத்துவங்களால் ஆகியது என்பது வைஷ்ணவ நெறி. இருபத்தைந்தாவது தத்துவம் உயிர். இருபத்தாறாவது தத்துவம் இறைவன் என்பது வைஷ்ணவ நெறி.

ப்ருந்தாவனமும் நந்தகுமாரனும் - தன்வந்தி பாயி - 1


டாக்டர் நாராயணதாஸ் பரவால் , ஜெய்புர் தர்பாரின் குடும்ப வைத்தியர். ஜெய்புர் நகரத்தில் அவர் மிகவும் மதிக்கப்பட்டார். அவருக்கு இரண்டு புதல்வர்களும் மூன்று பெண்களும் இருந்தனர். அதில் நடு பெண்ணிற்கு தன்வந்தீ பாயி என்று பெயர். டாக்டர் நாராயணதாஸ் தீவிரமான ஆர்ய ஸமாஜ தொண்டராக இருந்தார். அவரது வீட்டிலேயே ஆர்ய ஸமாஜின் வழக்கப்படி ஹோமாதிகள் நடைப்பெற்றன. தனது குடும்பத்தினரையும் ஆர்ய ஸமாஜத்தின் கொள்கைகளையே பின்பற்றச் செய்தார். குடும்பத்தினர் யாரும் கோயில்களுக்குச் செல்வதோ ஸ்ரீமத் பாகவதம் போன்ற புராண ப்ரவசனங்களுக்குச் செல்வதோ  தடையிடப்பட்டிருந்தது. தன்வந்தீ பாயியும் இச்சூழலிலேயே வளர்ந்தாள். ஆர்ய ஸமாஜத்தின் பள்ளியிலேயே அவள் கல்வியும் பெற்றாள். அதனால் ஆர்ய ஸமாஜத்தின் பாதிப்பு அவளிடம் ஆழமாக இருந்தது.
      சிறு வயதிலேயே தன்வந்தீ பாயிக்கு திருமணம் முடிந்துவிட்டது. அவள் பதினான்கு வயது இருக்கும் பொழுது, அவரது கணவர் காலகதி அடைந்துவிட்டார். இதன்பின், தன்வந்தீ பாயி தன் பிறந்தகத்திற்கே வந்து விட்டாள். அவளது வாழ்க்கையே சூன்யமாகி விட்டது. எப்பொழுதும் சோகம் பீடித்தது.
      ஒரு நாள் தன்வந்தீ பாயி, வீட்டின் மாடியில் உலாவிக் கொண்டிருந்தாள். அப்பொழுது, எதிரில் இருந்த மனையில், ப்ருந்தாவனத்திலிருந்து வந்திருந்த, ஒரு ராஸ மண்டலி குழுவினர், கிருஷ்ண-ஸுதாமா லீலையை நாடகமாக போட்டுக் கொண்டிருந்தார்கள். மாடியிலிருந்து நன்றாக அதை பார்க்க முடிந்தது.
      தன்வந்தீ பாயி, அந்த மண்டலியின் க்ருஷ்ணரின் அழகு மற்றும் மாதுர்யத்தில் தன்னையே மறந்தாள். ஸூதாமாவின் மீது க்ருஷ்ணன் பொழிந்த க்ருபை மற்றும் மாதுர்யத்தில் தன்னையே மறந்தாள். ஸூதாமாவின் மீது க்ருஷ்ணன் பொழிந்த க்ருபை மற்றும் அவனது பக்த வாத்ஸல்யத்தைக் கண்டு, தன் வாழ்வில் இழந்த நம்பிக்கையை அவள் சிறிது பெற்றாள்.  இறந்து விட்ட தன் மனதில் மீண்டும் ப்ராணன் ஸஞ்சரிப்பதை உணர்ந்தாள் தன்வந்தீ பாயி. சோகத்தின் கருமேகங்கள் விலகி அவளது மனதில் நம்பிக்கையின் புதிய கிரணங்கள் உதித்தன.
      அவள், "பகவானை சிருஷ்டி கர்த்தாவாகவும், இப்பிரபஞ்சத்தை இயக்குபவனாகவும் மட்டுமே எண்ணியிருந்தேன். ஆனால் அவரோ பக்தர்களின் நண்பராகவும் பந்துவாகவும் இருக்கிறாரே! அவர் ஆப்தகாமர் (எல்லா ஆசைகளும் பூர்த்தியானவர்), தன்னிலேயே ரமிக்கும் ஆத்மா ராமர், மோஹமற்றவர் என்று மட்டுமே நான் எண்ணியிருந்தேன். ஆனால் அவரோ லீலாமயமாகவும், கருணையே வடிவாகவும், பக்த வத்ஸலனாகவும் மட்டுமில்லாமல், பக்தர்களுக்கு அடிமையாகவும் அன்றோ இருக்கிறார்! ஸூதாமா எண்ணியதைப் போல பகவானை நண்பனாகவோ உறவினனாகவோ பாவனை செய்தால், பகவானும் நம்மிடம் அந்த பாவனையிலேயே பழகுகின்றானே! இப்படிப்பட்ட பரம கருணாமூர்த்தியான பகவான் கிருஷ்ணன் இருக்கும் பொழுது, துக்கத்திற்கோ சோகத்திற்கோ என்ன காரணம் இருக்க முடியும்? நானும் பகவானிடம் ப்ரேமையெனும் ஸம்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டு, அவனை ஏன் என்னுடையவனாக ஆக்கிக் கொள்ளக் கூடாது? அவரிடம் ஏன் நான் என்னையே ஆத்மஸமர்ப்பணம் செய்து, எனது வாழ்க்கையை பலனுள்ளதாக ஆக்கிக் கொள்ளக் கூடாது? " என்று எண்ணினாள்.
      ஸூதாமாவை ஆலிங்கனம் செய்து கொண்ட ஸ்ரீக்ருஷ்ணனின் கண்களிலிருந்து கண்ணீர் பெருகியதைக் கண்டாள் தன்வந்தீ பாய். அவள்  துக்கத்தின் காரணமாக ஸூதாமாவுடன் ஒன்றி விட்டாள். கிருஷ்ணன் தன்னையே ஆலிங்கனம் செய்து ஆச்வாஸப்படுத்துவதாக எண்ணி, பரம சாந்தியை அளிப்பதாக உணர்ந்தாள்.

News of Last month


பிப்ரவரி 23 அன்று ஸ்ரீஸ்வாமிஜி அவர்கள் சென்னை பரங்கிமலை அருகே உள்ள பாண்டுரங்கன் கோவில் கும்பாபிஷேக தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அருளுரையாற்றினார்கள். 
பிப்ரவரி 25 - ஸத்குரு தியாகராஜ ஆராதனை சபா சார்பில் பாலாஜி நகர் நங்கநல்லூரில் நடைபெற்ற ஆராதனை வைபவத்தில் ஸ்ரீஸ்வாமிஜி அவர்கள் கலந்து கொண்டு அருளுரையாற்றினார். போட்டிகளில் பங்கு கொண்டு வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகளும் வழங்கினார்கள். 
மார்ச் 2 - மஹாசிவராத்திரி - காலையில் விட்டலாபுரம் பாண்டுரங்கன் கோவிலில் ஸ்ரீஸ்வாமிஜி அவர்கள் விசேஷ திருமஞ்சனமும் பூஜையும்  செய்து, வந்திருந்த அன்பர்களுக்கு பிரசாதம் வழங்கினார்கள். மாலை மஹாரண்யம் கன்யாகுமரி ஆஞ்சநேயருக்கு வேதகோஷம் முழங்க, அபிஷேகம் ஸ்ரீஸ்வாமிஜி அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. சிறப்பு வடைமாலையும் சாற்றப்பட்டது. சாந்தீபனி குருகுல பிரின்ஸிபால் ஸ்ரீபாலாஜி சுந்தரகாண்டம் உபன்யாசம் செய்தார். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர். இரவு ஆரமத்தில் ஐந்து கால மஹாசிவராத்திரி பூஜை, ஸ்ரீநடராஜருக்கு நடைபெற்றது.  
 மார்ச் 6 - மஹாரண்யம் - மதுரபுரி ஆரம வளாகத்தில் மாணவர்கள் நன்கு தேர்வு எழுதுவதற்காக மஹாமந்திர கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஸ்ரீஸ்வாமிஜி அவர்கள் கலந்து கொண்டு அருளுரை வழங்கினார்கள்.
மார்ச் 8,9 - திருச்சி - எட்டாம் தேதி ஸ்ரீரங்கம் ப்ரேமிக வேதாரமத்திற்கு ஸ்ரீஸ்வாமிஜி சென்றிருந்தார்கள். மறுநாள் ஒன்பதாம் தேதி மாலை திருச்சி ஏ.எம்.எ.மஹாலில், ஸ்ரீஸ்வாமிஜி அவர்கள் ஒரு சிறப்பு மஹாமந்திர பிரார்த்தனை சத்சங்கம் நிகழ்த்தினார்கள். ஏராளமான அன்பர்கள் இதில் கலந்து கொண்டு பயனுற்றனர்.
மார்ச் 19 - சைதன்யமஹாபிரபு ஜெயந்தியை முன்னிட்டு மதுரபுரி ஆரமத்தில் மாதுரிஸகீஸமேத ஸ்ரீப்ரேமிகவரதனுக்கு புறப்பாடு ஸ்ரீஸ்வாமிஜி அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
      ஸ்ரீகிருஷ்ணரின் அவதாரமான சைதன்ய மஹாபிரபுவின் ஜெயந்தி தினம் வெகு விமரிசையாக தமிழ்நாட்டில் பல இடங்களிலும் பல மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் நாமத்வார் அன்பர்களால் கொண்டாடப்பட்டது. பல்லாயிரக்கணக்கான அன்பர்கள் இதில் கலந்து கொண்டனர் என்பதிலிருந்து இது எவ்வளவு சிறப்பாக நடைபெற்றது என்பது தெரிய வரும். தூத்துக்குடி மற்றும் குடியாத்தம் நகரங்களில் மட்டும் தலா ஐந்நூறு அன்பர்களும் விருதுநகர், தஞ்சாவூர், உடுமலைப்பேட்டை, ஆம்பூர், பெரியகுளம் ஆகிய நகரங்களில் தலா இருநூற்றி ஐம்பது அன்பர்களும், கடலூர், திருச்சி, வத்தலகுண்டு, சிவகாசி, ஸ்ரீபெரும்புதூர், பாண்டிச்சேரி, கோவூர், சைதன்யகுடிரம் (கோவிந்தபுரம்)  ஆகிய இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்டோரும், சென்னையில் அண்ணாநகர், அயனாவரம், கொடுங்கையூர், பட்டினப்பாக்கம், பம்மல், கே.கே.நகர், மதுரபுரி ஆஸ்ரமம் உள்ளிட்ட பல இடங்களில் மட்டும் சுமார் ஆயிரம் அன்பர்களும் கலந்து கொண்டனர். இது தவிர, மதுரை, சிங்கப்பெருமாள் கோவில், கலட்டுபேட்டை, உசிலம்பட்டி, திருப்பூர், தாராபுரம், அம்பாசமுத்திரம், ராணிப்பேட்டை, அணைக்கட்டு, திருத்துறைப்பூண்டி, சேலம், தருமபுரி. கொடுங்கையூர், காரைக்குடி, மங்களூர், வாலாஜா, வேலூர், கோயம்புத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், கம்பம் ஆகிய பல ஊர்களிலும் பல அன்பர்களும் கலந்து கொண்டனர். இந்த வைபவத்தில் அநேகமாக பல இடங்களில் அகண்டமாக காலையில் ஆறு மணி முதல் மாலை ஆறு மணி வரை  "ஹரே ராம" மஹாமந்திர கீர்த்தனம் நடைபெற்றது. பல மையங்களில் வீதி பஜனையும், புறப்பாடும், குருபாதுகா பூஜையும், பிரவசனங்களும் நடைபெற்றது. இது தவிர, இந்தியாவில் பெங்களூர், ஹைதராபாத், மும்பை, எர்ணாகுளம் ஆகிய பல நகரங்களிலும், ஆதிரேலியா, மலேசியா, சிங்கப்பூர், மத்திய கிழக்காசிய நாடுகள், இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற வெளிதேசங்களிலும் அகண்ட மஹாபிரபுவின் ஜெயந்தியை முன்னிட்டு, அகண்டமாக மஹாமந்திர கீர்த்தனம் நடைபெற்றது. எவரால் உலகத்தின் நன்மைக்காக மஹாமந்திர கீர்த்தனம் அருளப்பட்டதோ  அவரது ஜெயந்தி தினம் இப்படி சிறப்பாக கொண்டாடப்படுவது மிக்க மகிழ்ச்சி தரும் விஷயமாக இருக்கிறது. இம்மையங்களில் ஜப்பான் நாட்டில் இயற்கை சீற்றங்களினால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்காக மஹாமந்திர கீர்த்தனமும், பிரார்த்தனையும் செய்யப்பட்டது. 
மார்ச் 19 - சைதன்யமஹாபிரபு ஜெயந்தி - அமெரிக்கா ஹூடன் நாமத்வார் ஒருவருடம் முன்பு, சைதன்ய மஹாபிரபு ஜயந்தியன்று  துவங்கப்பட்ட ஹூடன் நாமத்வாரில் முதலாம் ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மூன்று நாட்கள் நடந்த இந்த கோலாஹலமான வைபவத்தில் நடைபெற்ற பல நிகழ்ச்சிகளில் ஏராளமான அன்பர்கள் கலந்து கொண்டனர். அகண்டமாக மஹாமந்திர கீர்த்தனமும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் டெக்சா மாகாண மேயர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில், எளியோருக்கு உதவியும், அன்னதானமும் மிக விமரிசையாக செய்யப்பட்டது.
மார்ச் 20 - அம்மாளு அம்மாள் மாரக தினம் -பங்குனி உத்திரம் -சென்னை ப்ரேமிக பவனத்தில் கும்பகோணத்தில் வாழ்ந்த அபார பக்தை அம்மாளு அம்மாவின் முதல் மாரக தினம் ஸ்ரீஸ்வாமிஜி அவர்களின் முன்னிலையில் அனுஷ்டிக்கப்பட்டது. மார்ச் 20 - சிங்கப்பெருமாள் கோவில் - T.E.G.நித்திய திருமணமண்டபத்தில் மாணவர்கள் நன்கு தேர்வு எழுதுவதற்காக மஹாமந்திர கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் சென்னை குளோபல் ஆர்கனைசேஷன் ஃபார் டிவினிடியை சார்ந்த ஸ்ரீபம்மல் பாலாஜி, ஸ்ரீபாலாஜி ராமச்சந்திரன், ஸ்ரீஹரேராம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மார்ச் 21 - 27 - சென்னை நாரதகானசபாவில் பக்த விஜயம் உபன்யாசம் - ஸ்ரீஸ்வாமிஜி அவர்கள் நிகழ்த்தினார்கள். பகவன்னாம போதேந்திரர், ஸ்ரீதரஅய்யாவாள், மருதாநல்லூர் சத்குருஸ்வாமிகள், புரந்தரதாசர், பக்த மீரா, ஸந்த் துக்காராம், ஜயதேவர் ஆகிய பக்தர்களின் சரித்திரங்களை அருளுரையாக வழங்கினார்கள். அனைத்து நாட்களிலும் அரங்கம் நிரம்பி வழிந்தது.

பாலகர்களுக்கு ஒரு கதை - பிரார்த்தனை


அது ஒரு அற்புதமான படகுத்துறை. இருபுறமும் உயர்ந்த மரங்கள். தெளிந்த நீர் சல சலவென ஓடும். தூரத்தில் பரந்த கடல் நன்கு தெரியும். சில்லென வீசும் காற்று. அவ்வப்பொழுது பறக்கும் பறவைகள் வினோதமாக ஒலி எழுப்பும். கண்ணுக்கெட்டியவரை நிர்மலமான ஆகாயம். படகுகள் நீரைக்கிழித்து செல்லும். சிறு பரிசல்களும் செல்லும். இந்த படகுகளிலும் பரிசல்களிலும் செல்பவர்கள் மற்றும் குழந்தைகளின் ஆரவாரம்தான் அங்கு ஏற்படும் ஒரே சப்தம். எல்லோர் முகத்திலும், ஒரு பரபரப்பும் பரவசமும் தென்படும். வெளிநாட்டவர் பலர் இருப்பர். அவர்களில் பலர் கைகளில் தொலைநோக்கு பைனாகுலரோ அல்லது சிறிய வீடியோ காமெராவோ இருக்கும். படகுகள் சிறு தூரம் வரை சுற்றுலா பயணிகளை கூட்டி செல்லும். படகோட்டிகள் துடுப்புகளை முன்னும் பின்னும் வலித்து படகுகளை செலுத்துவர். சில சமயம் படகுப்போட்டிகளும் நடைபெறும். தினமும் யாத்திரீகர்கள் வந்து படகுப்பயணத்தில் சவாரி செய்து செல்வர். அங்கு முனுசாமி என்பவன் படகோட்டியாக தன் வாழ்க்கையை வாழ்ந்து வந்தான். அவனுக்கு அதுதான் ஜீவாதாரம். வலிமையான புஜங்கள் கொண்ட அவன் யாத்திரீகர்களிடம் மிக நயமாக பேசி அவர்களை சவாரிக்கு அழைத்து சென்று வருவான். அவன் படகு சற்றே பெரியது. அதில் ஒரு பத்து பதினைந்து நபர்கள் உட்காரலாம். கோடைக்காலம் முடிந்து கார்காலம் ஆரம்பமான தருணம் அது. மிக தெளிவாக அழகாக வானம் இருந்தது அன்று. பகல் 3மணி இருக்கும். வெய்யிலின் இளஞ்சூடு உடலுக்கு இதத்தை கொடுத்தது. பலமான காற்று இல்லை. மெலிதான காற்றுதான் வீசியது. அப்பொழுது ஒரு ப அங்கு வந்து இறங்கியது. படகுக்காரர்கள் போட்டி போட்டுக்கொண்டு பயணிகளை தம்தம் பக்கம் இழுத்தனர். முனுசாமி படகிலும்  பலர் ஏறினர். அதில் இருவர் கல்லூரி மாணவர்கள். ஒரு இளம் தம்பதிகள் தம் கைக்குழந்தையுடன் ஏறி இருந்தனர். ஒரு வயதான தாத்தா பாட்டி தமது இளவயது பேரனுடன் சுற்றுலாவாக வந்திருந்தனர். இது தவிர ஒரு முழு குடும்பம் ஏறி இருந்தது. எல்லோரையும் படகில் அமர்த்திய பின், முனுசாமி கண்களை மூடியபடி கடவுளிடம் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தான். வழக்கமாக அவன் செய்வதுதான் இது. அவசரமே இல்லாமல் ஒரு ஐந்து நிமிடம்  செய்தான். அதற்குள் கல்லூரி மாணவர்கள் "வாய்யா! போகலாம். இப்பொழுது போய் பிரார்த்தனையா?" என முணுமுணுத்தனர். தாத்தா உடன் "ஆமாம்! அதெல்லாம் காலையில் செய்ய வேண்டிய சமாசாரம்" என்றார். பாட்டி சிரித்தாள். இளம் தம்பதிகளோ இவர்கள் சொல்வதை ஆமோதிப்பது போல் முகபாவம் கொண்டிருந்தனர். அந்த குடும்ப தலைவரோ பொறுமையை இழந்து "என்னய்யா பணம் வாங்கி கொண்டு தாமசம் செய்கிறாய். கிளம்பு" என்று அதிகாரமாக பேசினார். எதையும் கேட்காதது போலிருந்த முனுசாமி பிரார்த்தனையை முடித்து கிளம்பினான். படகு ஒரு கி.மீ. உள்ளே சென்றது. எல்லோரும் ரசிக்க ஆரம்பித்தனர்.
      திடீரென எங்கிருந்தோ காற்று வீச ஆரம்பித்தது. கார்மேகம் சூழ்ந்தது. எல்லாம் கண நேரத்திற்குள் நிகழ்ந்து விட்டது. யாத்திரிகர்கள் திரும்பி விடலாமா என யோசித்தனர். முனுசாமி எதையும் மனதில் வாங்காமல் அவர்களிடம் சிரித்தவாறு பதட்டமின்றி பேசி வந்தான். மேலும் சில நொடிகளில் மழை "சோ"வென பெய்ய ஆரம்பித்தது. காற்றும் மிக பலமாக வீசியது. படகு அசைய ஆரம்பித்தது.  கீழே தண்ணீரின் ஆழம் மிக அதிகம் என்பது அனைவருக்கும் தெரியும். காற்றில் அசைகையில் படகு கவிழ்ந்துவிடும் போலிருந்தது. "திக் திக்" என யாத்திரிகர்களுக்கு இருந்தது. முனுசாமி இப்பொழுது துடுப்பை போடுவதை மேலும் பலப்படுத்தி கரையை நோக்கி செலுத்தினான். யாத்திரிகர்களுக்கு பயம் வந்து விட்டது. கல்லூரி மாணவன் சொன்னான் "கடவுளே! என்னை காப்பாற்று" என்று. தாத்தா சொன்னார் "படகோட்டி! என்னை சீக்கிரம் கொண்டு சேர்த்து விடு. தெரியாத்தனமாக ஆசைப்பட்டு இப்படி மாட்டிக்கொண்டேன்" என்று. அந்த இளம் தம்பதிகள் அவசரம் அவசரமாக தங்கள் பையிலிருந்து ஒரு வாமியின் புகைப்படத்தை எடுத்து அதன் முன் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தனர். அந்த குடும்ப தலைவருக்கு உதறல் எடுக்க ஆரம்பித்தது. அவர் அழ ஆரம்பித்து விட்டார். "அடடா! என் நிலைமை இப்படி ஆயிற்றே" என்று. இத்தனைக்கும் நடுவில் முனுசாமி சற்றேனும் பதறவில்லை. அவன் கைகள் சலியாமல் துடுப்புகளை சரியாக இயக்கின. சுமார் அரைமணி நேர போராட்டத்திற்கு பின், படகு கரை வந்து சேர்ந்தது. அப்பொழுது எல்லோரும் முனுசாமியை பாராட்டினர். தாத்தாவின் கண்களில் பயம் நீங்கி கண்ணீரே வந்து விட்டது.
      அப்பொழுது முனுசாமி பேசினான் "எல்லோரும் என்னை ஆரம்பத்தில் பிரார்த்தனை செய்ததற்கு கேலி செய்தீர்களே! நான் என்ன பிரார்த்தனை செய்தேன் தெரியுமா? கடவுளே! இப்பொழுது வானம் நன்றாக இருக்கிறது. ஒருக்கால் வானிலை மோசமாகி வரும்பொழுது என் மனம் பதறாது நான் என்ன செய்ய வேண்டுமோ, அதை என்னை செய்ய வைத்து விடு" என்று பிரார்த்தித்தேன். நானும் உங்களுடன் சேர்ந்து துடுப்பு போடாமல் கடவுளை அப்பொழுது பிரார்த்தித்து வந்திருந்தேன் எனில் இப்பொழுது கரை சேர்ந்திருப்போமா? என்றான். அவன் சொன்னது அனைவருக்கும் சொரேலேன உரைத்தது.
      காலம் நன்றாக இருக்கும்பொழுதே கடவுளிடம் மனதை செலுத்த வேண்டும்.