Thursday, March 3, 2011

Sanathana Pudhir Qtn 25 - Answers 24 - By Athreyan

சனாதனப் புதிர் - பகுதி - 25
1) சாந்திரமான சைத்ர மாதத்தில் ஐந்து விசேஷங்கள் வருகின்றன. இவை யாவை?
2)    தேவஹூதி யாருடைய பெண்? அவள் கணவர் பெயர் என்ன? எத்தனை குழந்தைகள்? அவருக்கு யார் உபதேசம் செய்தது? இந்த உபதேசம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
3)    ரிக் வேதம் பசுவை எப்படி குறிப்பிடுகிறது? மற்றும் பசுவின் பெருமைகள் எங்கு போற்றப்படுகின்றன?
4)    தேவ வ்ரதன் இவர் யார்? இவருக்கும் க்ருஷ்ணரது புல்லாங்குழலுக்கும் என்ன சம்பந்தம்?
5)    காசியில் கங்கைக் கரையில் மணிகர்ணிகா காட் இருக்கிறது. இதன் மற்றொரு பெயர் என்ன?
6)    அத்வைத சன்யாசிகள் தீக்ஷைக்குப் பிறகு புதிய நாமகரணத்தோடு அடைமொழியும் சேர்த்துக் கொள்கிறார்கள்  இந்த அடைமொழிகள் யாவை?
7)    தக்ஷிணாமூர்த்தி உபநிஷத் - இது எந்த வேதத்தைச் சார்ந்தது? எத்தனை ஸ்லோகங்கள்? எத்தனை மந்திரங்கள்?
8)தேவாபி இவர் யார்? இவருக்கும் பீஷ்மருக்கும் என்ன சம்பந்தம்?
9)சம்பாபுரி  - இது எந்த தேசத்து தலைநகர்? இதை ஆண்ட மன்னர்கள் யார்? இது எங்கு இருக்கிறது?
10)தேவி உபநிஷத்  இது எந்த வேதத்தில் காணப்படுகிறது? மொத்தம் எத்தனை மந்திரங்கள்?

சனாதனப் புதிர் : பகுதி - 24 விடைகள்
1)    ப்ரஹதாரண்யக உபநிஷத். இவர் காசி அரசர் மஹாஞானி; த்ருப்த பாலகி என்ற ரிஷிக்கு உபதேசம் செய்தவர்.கௌஸிதகி ப்ராஹ்மண உபநிஷத்  இதை உறுதி செய்கிறது.
2)    பத்ம புராணம் - காண்டம் 5 (உத்திர காண்டம்) சர்க்கம் 36 முதல் 66 வரை.
3)    மனைவி - கொடுஞ்செயல்; பொய் - மகன்; ஏமாற்றும் வஞ்சிக்கும் குணம் - மகள்; மாயை, பயம், வேதனை, நரகம், துக்கம், மரணம் - இவைகள் சந்ததிகள்;  விஷ்ணு புராணம் (1.7).
4)    பத்ம புராணம் ; காண்டம் 4 - பாதாள் காண்டம்; சர்க்கம் 71,75,76.
5)    சுக்ல யஜுர் வேதம்; நிர்வாண அனுசாஸனம்; தூரீயத அவதூத உபநிஷத்.
6)    பத்ம புராணம்; காண்டம் 5 - உத்திர காண்டம்  சர்க்கங்கள் 171 முதல் 190 வரை.
7)    சபர்மதி நதி கடலில் கலக்கும் இடம் - (பத்ம புராணம்) மற்றும் சல்ய பர்வா - (49) மஹாபாரதம்  - விஷ்ணு மது-கைடபர்களை இங்கே ஸம்ஹாரம் செய்தார்.
8)    தக்ஷகனின் மகளான அஸ்வசேனனை.
9)    மத்வாச்சாரியாருக்கு ; நாராயண ஆசார்யார் எழுதிய மணிமஞ்சரி என்ற நூல்.
10) ப்ரஹ்ம வைவர்த்திக புராணம்.

No comments:

Post a Comment