Thursday, March 3, 2011

பக்தர்களின் கேள்விகளுக்கு ஸ்ரீ ஸ்வாமிஜி அவர்களின் பதில்கள்

கேள்வி: நான் ஏதோ அறியாமல் சில தவறுகள் செய்து விட்டேன். அதை நினைத்து நினைத்து என் மனது என்னை உறுத்திக்கொண்டே இருக்கின்றது. நான் என்ன செய்யலாம்?
பதில்: கருணையே வடிவான மஹரிஷிகள் எந்த எந்த தவறு செய்தாயோ, அதற்கு தகுந்தாற்போல் பிராயச்சித்தங்கள் நிறைய சொல்லி இருக்கின்றார்கள். தாங்கள் நல்ல சாதிரம் படித்தவரை அணுகி, அதற்கான பிராயச்சித்தங்கள் செய்து கொள்ளலாம்.

கேள்வி: ஒரு தவறு நடந்திருக்குமோ அல்லது நடந்திருக்காதோ என்று சரியாக தெரியவில்லை. அப்படி இருக்கும்பொழுது நடந்து விட்டதாக நினைத்து பிராயச்சித்தம் செய்து கொள்ளலாமா?
பதில்: செய்து கொள்ளலாம். தவறு இல்லை. பிராயச்சித்தங்கள் தவறு நடந்திருந்தால் அதை போக்கி விடும். அப்படி எதுவும் தவறு நடக்கவில்லை என்றால் நாம் செய்யும் பிராயச்சித்தங்கள் புண்யபலனாக மாறி விடும்.

கேள்வி: இதிஹாஸங்கள் இரண்டா மூன்றா?
பதில்: இதிஹாஸங்கள் மூன்று.

கேள்வி: மூன்றாவது என்ன?
பதில்: சிவ ரஹயம்.

கேள்வி: ஏன் அதை பெரும்பாலும் பாராயணமோ அல்லது பிரவசனமோ செய்வதில்லை?
பதில்: அதில் சொல்லப்பட்டிருக்கின்ற பல விஷயங்களை, பரிபக்குவமில்லாதவர்கள் விபரீதமாக புரிந்துகொள்ள நேரிடும் என்பதாலேயே, பெரியவர்கள் இன்று வரையிலும் அதை பிரகாசப்படுத்தவில்லை.

No comments:

Post a Comment