Thursday, March 3, 2011

ஸ்ரீஸ்வாமிஜியின் மீது இயற்றப்பட்ட கீர்த்தனம்

 புரிந்துகொண்டேன் சிறிதே உன்னை புரிந்து கொண்டேன் முரளீதரா
சட்டம் படித்த எனக்கு அதை சட்டநாதர் புரியவைத்தார் முரளீதரா
பள்ளியில் பெருமாளை எங்கோ கண்டு ஏங்கினாய் முரளீதரா
ஆனால் வெங்கடேசனோ திருப்பதியில் நினை காண ஏங்கினான் முரளீதரா

நின் பெற்றோர்கள் என்ன தவம் செய்தனரோ அறியேன் முரளீதரா
கருவினிலே உன்னை இறை பக்தியும் ஏக்கமும் ஆட்கொள முரளீதரா
தளிரிலிருந்து ராதே கூவினாள் உன் செவியில் ராதே ராதே என அல்லவா முரளீதரா
அந்த கள்ளன் கண்ணனோ உன்னுடன் கண்ணாமூச்சி ஆடினானோ முரளீதரா

பரமஹம்ஸர் நரேனுக்கு காளிமாதாவை காட்டினாள் முரளீதரா
உனக்கோ ராதேயும் கிருஷ்ணனும் வலிய வந்து காட்சியளிக்கின்றனர் முரளீதரா
ஆயினும் உனக்கு ஏன் இன்னும் தீரா ஏக்கம் முரளீதரா
நாங்கள் அவ்வனுபவத்தில் லயிக்க வேண்டும் என்ற ஏக்கம்தானே முரளீதரா

குமரி வேண்டாம் மஹாரண்யமே சிவன் தலம் என்று ஹனுமனே                  முன்னரேயே உணர்த்தி எழுந்தருளினான் அல்லவா முரளீதரா
உன் மஹாமந்திரத்தை திரமாக மூலதானத்தில் கேட்கவேண்டும்                                              என்றுதானே அவன் வந்தான் முரளீதரா
ஹனுமனுக்கு ராமன் என்றால் அருணாசலத்திற்கோ       யோகி ராம்சுரத்குமார்தானே முரளீதரா
அவனுக்கு ராமன் பித்து எனக்கோ ராம்சுரத்குமார் பித்து முரளீதரா

பாரதியோ சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா என பாடினான் முரளீதரா
நீயோ தளிரிலிருந்து ராதே ராதே ராதே என்று கூவுகிறான்                                                                  என பாடுகிறாய் முரளீதரா
உண்மையை சொல்லிவிடு உன் மனம் கல்லா முரளீதரா
எங்கள் கல்மனங்களை கரைக்கும் உன் மனம் எப்படி கல்லாகும் முரளீதரா

உன் உள்ளே இருக்கும் ராதேகிருஷ்ணனை நீ கண்டுகொண்டே                                இருக்கிறாய் என்பதுதானே உண்மை முரளீதரா
உனக்கு வெளியே தோன்றும் காட்சிகளிலும் அதே                                                  ராதேகிருஷ்ணன்தானே முரளீதரா
நீ வேறில்லை ராதேகிருஷ்ணன் வேறில்லையே இனியும் ஏன் ஏக்கம் முரளீதரா
அம்மாதிரியே ராம்சுரத்குமாரனை என் உள்ளும் வெளியும்                                                                      இருத்திடுவாய் முரளீதரா

என்ன என்ன லீலைகளை யோகிஜி புரிந்திடுவார் என நான் அறியேன்                                                    ஆனாலும் நீ அறிவாய் முரளீதரா
தொழில் போதும் எந்தையின் பணிக்கே என்றவர் கூற சரியென                                                                            வந்தேன் முரளீதரா
மற்றவர்களோ எனை பித்தன் என கூற அப்பித்தே எனக்கு பிடித்தமானது                                                                            என்றேன் முரளீதரா
உன் மீதும் எனக்கு பித்து பிடிக்க யோகிஜியின் திருவிளையாடல்                                                   என்னவென சொல்வேன் முரளீதரா

குறிப்பு: நீதியரசர் ஸ்ரீஅருணாசலம் அவர்களால் 26.12.2010 அன்று இயற்றப்பட்ட கீர்த்தனம் (Justice Sri T.S.Arunachalam, LifeTime Trustee, YogiRamSuratKumar Ashram, Thiruvannamalai)


No comments:

Post a Comment