Thursday, March 3, 2011

வேடல் கிராமத்தில் ஒரு அழகான புராண கண்காட்சி - பாலகிருஷ்ணன்

காஞ்சிபுரம் ஏகாம்ரநாதர் மற்றும், திருப்புட்குழி விஜயராகவ பெருமாளை தரிசித்து வர ஒருநாள் நண்பருடன் கிளம்பினேன். ஸ்ரீபெரும்புதூர் தாண்டி காரில் வேடல் கிராமம் என்ற போர்டை தாண்டி செல்கையில் சாலையை ஒட்டி இடதுபுறம் ஒரு மிகப் பெரிய சிவனார் சிலை  கவனத்தை ஈர்த்தது. என்னவென நின்று பார்த்தால் அழகான வாலுடன் பெரிய நந்தி முன்னர் பரமசிவனார் கீழ் அஷ்ட திக்பாலர்கள் அழகாக அமைந்து இருந்தது. போர்டு ஒன்று கண்காட்சி இருப்பதாக தெரிவித்தது. விசாரித்தால் சற்று உள்ளே செல்ல சொன்னார்கள். உள்ளே சிறு மைதானம். ஒட்டினாற்போல் கட்டிடங்கள். அங்கு சென்று விசாரித்தோம். ஓரிடத்தில் காஞ்சி மஹாவாமிகளின்  புகைப்படங்கள் (சுமார் 20000)  அழகாக வைக்கப்பட்டு இருந்தது. மற்றொரு இடத்தில் பாகவதம், மஹாபாரதம், இராமாயண காட்சிகள் எல்லாம் பொம்மையாக செய்து வைக்கப்பட்டு இருந்தது. மின்சாரத்தை துவக்கினால்.  ஒவ்வொரு காட்சியில் இருந்த பொம்மையும் அந்தந்த லீலைக்கு தகுந்தாற்போல் இயங்கியது. கண்ணன் பிறப்பு, காத்யாயனி கம்சனை மிரட்டுவது, வெண்ணை திருடுவது, பல அசுர வதங்கள்,  என ஒன்று கூட விடாமல் அனைத்தும் இருந்தது. இப்படியே  ராமாயணமும், பாரதமும் இருந்தது. விஸ்வாமித்திரருடன் ராம, லக்குவர்கள், அனுமன் தசக்ரீவனை அடிப்பது, பாரதத்தில் அர்ஜீனன் வெல்வது, பாகவத அம்ருதமதன காட்சி எல்லாம் மிக அருமை. கோடை விடுமுறையில் எங்கெல்லாமோ குழந்தைகளை அழைத்து செல்கிறோம். இங்கு அழைத்து சென்றால் குழந்தைகளும் மிக சந்தோஷப்படும். மிக்க பயனும் உண்டு. பலரும் பயன் பெற வேண்டி, மிக அழகாக,  காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அவர்கள் இதை நிர்மாணித்திருக்கிறார்கள். சென்று பயன் பெறலாமே!

No comments:

Post a Comment